பாஜ கம்பத்தில் தேசியக் கொடி

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் ஏராளமான கட்சி கொடி கம்பங்கள் உள்ளன. இதில் பாஜக கொடி கம்பமும் உள்ளது. இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக் கம்பத்தில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தேசிய கொடியை ஏற்றி உள்ளனர். இன்று காலை இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள், பேருந்தில் அந்த வழியாக சென்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தேசியக்கொடியை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் பாஜகவினர் கட்சி கொடி கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி உள்ளனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.‘’நாங்கள் தேசபக்தி உள்ளவர்கள் என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் பாஜகவினர் தங்கள் கட்சி கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி அவமதிக்கலாமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.