திருமணமான உடனே காதல் மனைவியை பிரித்துச்சென்ற குடும்பத்தினர்.! தீக்குளிக்க முயன்ற காதலனால் பரபரப்பு


காதல் மனைவியை திருமணம் செய்த நாளே பிரித்து அழைத்துச் சென்றதால், கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீக்குளிக்க முயற்சி

தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தில் மின்னாம்பள்ளி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் ராகதேவன் எனும் இளைஞர், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

திருமணமான உடனே காதல் மனைவியை பிரித்துச்சென்ற குடும்பத்தினர்.! தீக்குளிக்க முயன்ற காதலனால் பரபரப்பு | Love Marraige Wife Missing Husbands Suicide

விசாரணையில்.,

அந்த விசாரணையில், சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நித்யா (21) என்பவரை காதலித்துள்ளார்.

நித்யா ஒரு வங்கி தேர்வு எழுத வந்தபோது அவருக்கும், ராகதேவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

கடந்த 6-ஆம் திகதி மின்னாம்பள்ளியில் இருக்கும் கோவிலில் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

இதனை அறிந்த நித்தியாவின் உறவினர்கள் அங்கு வந்து, இருவருக்கும் முறைப்படி மண்டபத்தில் வைத்து திருமணம் செய்து வைப்பதாகக் கூறி நித்யாவை சென்னைக்கு அழைத்து சென்றனர்.

மன உளைச்சல்

அதன் பிறகு, நித்யாவின் குடும்பத்தினரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சென்னைக்கு சென்று பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்.

ஆனால் நித்தியாவை கண்டுபிடிக்க முடியாததால், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ராகதேவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். காதல் மனைவியை பிரித்துச் சென்றுவிட்டதால் காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.