கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை

விழுப்புரம்: விழுப்புரம் காகுப்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் ஜோதி(21). இவர் அரசு கல்லூரியில் எம்ஏ முதலாண்டு படித்து வந்தார். நேற்று காலை இவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜோதி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு ஜோதி உடல் முழுவதும் கருகி இறந்து கிடந்தார். விழுப்புரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ஜோதிக்கு நேற்று காலை ஒரு போன் வந்ததாகவும், அதன்பிறகே அவர் தீக்குளித்து தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. போனில் பேசிய நபர் யார் என விசாரணை நடக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.