உச்சநீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்

உச்சநீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த டிசம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு கொலிஜீயம் பரிந்துரைத்த பட்டியலுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 5 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32ஆக உயர்கிறது. ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல், பாட்னா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல் ,மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அமானுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.