துருக்கியில் 6 வயது குழந்தையை உயிருடன் மீட்ட இந்திய ராணுவத்திற்கு அமித்ஷா பாராட்டு

துருக்கியில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பெண் ராணுவ அதிகாரியின் கன்னத்தில் துருக்கி பெண்மணி ஒருவர் முத்தமிட்டு வாழ்த்தினார்.

ஆபரேசன் தோஸ்த் என்ற பெயரில் சிரியா மற்றும் துருக்கிக்கு இந்தியா ஆறு ராணுவ விமானங்களில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர், மருத்துவக் குழுவினரை இந்தியா அனுப்பியுள்ளது. 135 டன் மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களும் அங்கு அனுப்பப்பட்டு உள்ளன.

இதனிடையே, காசியான்டெப் நகரில் 6 வயது சிறுமியை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்ட வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.