சந்திரமுகி 2: "ஜோதிகா அளவுக்கு என்னால் நடிக்க முடியாது!"- மனம் திறந்த கங்கனா ரணாவத்

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் 2005-ல் வெளியான திரைப்படம் `சந்திரமுகி’.

தமிழ்த் திரையுலகில் மெகா ஹிட் அடித்த இத்திரைப்படம் 500 நாள்களைக் கடந்து திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. இதையடுத்து லைகா தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். இவர் தவிர வடிவேலு, இசையமைப்பாளர் கீரவாணி, கலை இயக்குநர் தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் போன்றவர்களும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளனர்.

கங்கனா – சந்திரமுகி 2

குறிப்பாக, ரஜினி நடித்த முதல் பாகத்தில் முக்கியக் கதாபாத்திரமான ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்தில் தற்போது கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்நிலையில் ஜோதிகாவின் நடிப்புக்கு இணையாக கங்கனா நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கின.

இந்நிலையில் 2019ல் நேர்காணல் ஒன்றில், “பாலிவுட்டில் எனக்குப் பிடித்த நடிகை கங்கனா ரணாவத்” என்று ஜோதிகா கூறியிருந்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா, “இது எனக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. தற்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுத்து வருகிறோம். எனவே, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஜோதிகா ஜி-யின் சிறந்த நடிப்பைத் தினமும் திரும்பத் திரும்பப் பார்த்து வருகிறேன். அது என்னை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. அந்த அசாத்தியமான நடிப்புக்கு இணையாக நடிப்பது முடியாத காரியம்” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.