நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் மதுபோதையில் சிறுநீர் கழித்த மாணவர்.. விமான நிறுவனம் புகார் அளித்த நிலையில் மாணவரிடம் விசாரணை!

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவர் மதுபோதையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது கழித்த சிறுநீர் சக பயணி மீது பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று இரவு டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஏஏ292 விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கும் அந்த மாணவர் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது சிறுநீர் கழித்ததாகவும், அது கசிந்து சக பயணி மீது பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவர் மன்னிப்பு கேட்ட நிலையில், விமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.