எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு சமமாக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதினால் அதன் நன்மையை அடுத்த விலை திருத்தத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மினுவங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். தற்போது மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை நாளாந்தம் வழங்குமாறும் கோரியுள்ளனர் என்று கூறினார்.
80,000 வேட்பாளர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக, போதுமானளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு சுமார் 6 மாதங்கள் ஆகும். இதுதொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலையை குறைக்க மறுசீரமைப்பு கண்டிப்பாக அவசியம் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.