மகாராஷ்டிரா துணைமுதல்வரின் மனைவிக்கு மிரட்டல் – பெண் ஆடை வடிவமைப்பாளர் கைது..!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், பெண் ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.

தேவேந்திர பட்னவிஸின் மனைவி அம்ருதா பட்னவிஸ் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஆடை வடிவமைப்பாளர் எனக் கூறி அறிமுகமான அனீக்-ஷா ஜெய்சிங்கானி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தன் தந்தையை விடுவிக்கக் கோரியும், அதற்கு தனக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க முயன்றதுடன், மிரட்டலும் விடுத்துள்ளார் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதனிடையே, மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சூழ்நிலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியது.

இதையடுத்து, சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆடை வடிவமைப்பாளர் அனிக்-ஷாவை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.