பிரதமரின் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி: மாணவர்கள் பரிந்துரை வழங்க யுஜிசி அழைப்பு

சென்னை: பிரதமரின் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சியையொட்டி, மாணவர்கள் பரிந்துரைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக யுஜிசி செயலாளர் மனிஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014-ல் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும், அகில இந்திய வானொலிமூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வரும் ஏப்.30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பு மிக்கதாகவும், நீண்டகாலம் நினைவில் நிற்கும் வகையிலும் யோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்குமாறு மத்திய அரசு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, பரிந்துரைகளை வழங்க விரும்பும் பொதுமக்கள், மத்திய அரசின் https://www.mygov.in என்ற இணையதளத்தில் 30 நொடிகளுக்கு மிகாமல் பரிந்துரைகளை பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் வகையில், பதாகைகள் மற்றும் விளம்பர அட்டைகளின் வடிவமைப்புகள் https://drive.google.com/drive/folders/1Hj-75_Nymhg6an_H5yq8zR7A-1bZhWS0 என்ற இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளன. இவற்றை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி, கல்லூரி வளாகங்களில் இந்த நிகழ்ச்சி குறித்து பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, அதிக அளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் பரிந்துரைகளை வழங்கஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.