மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்காக சிகிச்சை எடுத்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் மேல் சிகிச்சை பெற வசதியதாக நடிப்பில் இருந்து 6 மாதங்கள் பிரேக் எடுத்திருக்கிறார்.
“கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !
சமந்தாவுக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இந்தோனேசியாவில் இருக்கும் பாலிக்கு தன் தோழியும், மேக்கப் கலைஞருமான அனுஷ் சாமியுடன் சென்றிருக்கிறார்.
அங்கிருந்து தொடர்ந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் சமந்தா. அதை பார்த்து வாவ், எவ்வளவு அழகான இடங்களாக இருக்கிறது. இந்த நேரத்தில் இது போன்ற இடங்களுக்கு செல்வது உங்களுக்கு நல்லது சம்மு. நல்ல காரியம் செய்து வருகிறீர்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் இன்ஸ்டா ஸ்டோரீஸில் சமந்தா வெளியிட்ட வீடியோ தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 4 டிகிரி குளிரில் அதுவும் 6 நிமிடங்கள் ஐஸ்பாத் எடுத்திருக்கிறார் சமந்தா. அந்த வீடியோவை வெளியிட்டு தான் ரசிகர்களை அதிர வைத்துவிட்டார்.
ஐஸ் பாத் எடுப்பதால் தன் உடல்நலத்திற்கு நன்மை ஏற்படுவதாக கூறினார் சமந்தா. அதனால் தான் இப்படி நடுங்கும் குளிரிலும் நீரில் இறங்கியிருக்கிறார்.
சமந்தாவின் நிலைமையை பார்த்து ரசிகர்கள் பாவப்படுகிறார்கள். இந்தோனேசியாவுக்கு கிளம்பும் முன்பு வேலூரில் இருக்கும் பொற்கோவிலுக்கு சென்று தன் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்தார். அதன் பிறகு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வேண்டினார்.
Samantha: உடல்நலம் சரியாகணும்: பொற்கோவிலை அடுத்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்ற சமந்தா
மேலும் ஈஷா மையத்தில் யோகாவும் செய்தார். இது தவிர மனதிற்கு பிடித்த படங்களை பார்த்து ரசித்தார். காரில் பயணம் செய்தபோது பிடித்த பாடல்களை கேட்டு ரிலாக்ஸ் செய்தார்.
முன்னதாக ராஜ் மற்றும் டிகே இயக்கதத்தில் சிடாடல் வெப்தொடரில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோதும் ஐஸ் பாத் எடுத்தார் சமந்தா. அந்த வெப்தொடரில் உளவாளியாக நடித்திருக்கும் சமந்தா, ஆக்ஷன் காட்சிகளில் டூப் போட மறுத்துவிட்டார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தனக்கு உடல்நலம் சரியில்லாவிட்டாலும் டூப் போட விட மாட்டேன் என அடம்பிடித்து நடித்தார். சிடாடல் தவிர்த்து விஜய் தேவரகொண்டாவின் குஷி படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் சமந்தாவுக்கு நிச்சயம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் சாகுந்தலம். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான சாகுந்தலம் படம் தோல்வி அடைந்தது. இதையடுத்தே குஷி படத்தை சமந்தா எதிர்பார்க்கிறார்.
6 மாதங்கள் கழித்து திரும்பி வந்த பிறகு சில பெரிய ப்ராஜெக்ட்டுள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறதாம். மேலும் 2024ம் ஆண்டில் தான் சிடாடல் வெப்தொடரும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தாவை தேடி பாலிவுட் பட வாய்ப்புகள் வந்ததாக தகவல் வெளியாகியது. அதனால் அவர் திரும்பி வந்த பிறகு பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சமந்தா பூரணமாக குணமடைய வேண்டும் என ரசிகர்களும் கோவில், கோவிலாக சென்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.