"கலைஞர் உரிமைத் தொகையா".. கலைஞருக்கு என்ன உரிமை இருக்கு.. உன் பரம்பரை காசா? சீமான் ஆவேசம்

சென்னை:
“பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தில் கலைஞருக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

8 லட்சம் கோடி கடன் வச்சிருக்குற இந்த அரசு, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறேன். கல்லூரிக்கு போற பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறேன். எங்கே இருந்து இந்தப் பணத்தை கொடுக்குற? உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே கிடையாதா?

என் காசை எடுத்து எனக்கே கொடுக்குறதுக்கு கலைஞர் உதவித்தொகை, கலைஞர் உரிமைத் தொகைனு வேற பெயர் வைக்க வேண்டியது. அதுல கலைஞருக்கு என்ன உரிமை இருக்கு? கலைஞர் உரிமைத் தொகை எங்கிருந்து வந்தது? நீங்க என்ன ராஜராஜ சோழ பரம்பரையா? சொத்தை எல்லாம் வித்துட்டு நீ எனக்கு காசு கொடுக்குறியா?

என் அம்மா அப்பாட்ட இருந்து எடுத்து, என் மாமன், மச்சான், சொந்தக்காரனை எல்லாம் குடிக்க வச்சு கெடுத்து, அவங்ககிட்ட இருந்து காசை பறிச்சு அதுல இருந்து எங்களுக்கு 1000 ரூபா கொடுக்குற. நீ எனக்கு ஓட்டு போட்டு பாரு. நான் உலகத்துக்கே உணவு ஏற்றுமதி செஞ்சு காட்டுறேன். விவசாயத்தையே அரசு வேலையாக மாத்திருவேன். உன் டாஸ்மாக் கடையில் மதுவை ஊத்திக் கொடுக்குறவன் அரசுப் பணியாளரா இருக்கும் போது, உலகத்துக்கு சாப்பாடு போடுற விவசாயி அரசுப் பணியாளனா இருக்கக் கூடாதா? இவ்வாறு சீமான் கேள்வியெழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.