"நாங்க பாவ யாத்திரைனா திமுக பாவக்கடல்.. அதுல மூழ்குற முதல் ஆளு ஸ்டாலின்தான்".. வானதி சீனிவாசன் அட்டாக்

சென்னை:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள பாத யாத்திரையை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அதற்கு கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ

பதிலடி கொடுத்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று பாத யாத்திரையை தொடங்கியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். இதனிடையே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜகவின் இந்த பாத யாத்திரையை ‘பாவ யாத்திரை’ என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை மக்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாஜகவில் புதிய நபர்களை சேர்ப்பதற்கும், மாநிலம் முழுவதுமே கட்சியின் வளர்ச்சிக்கும் இந்த பாதயாத்திரை பெரிதும் பயன்படும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருவதை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதன் வெளிப்பாடாகவே, பாஜகவின் இந்த பாத யாத்திரையை பாவ யாத்திரை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக தினம் தினம் செய்து கொண்டிருக்கும் பாவத்தை அளவு எடுத்தால், முதல்வரெல்லாம் ‘பாவம்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் மூலமாக எத்தனை பெண்களின் பாவங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

இப்படி திமுக செய்யும் பாவங்களை கணக்கிட்டால் அது பெரிய பாவக் கடலாக தான் இருக்கும். நாங்க பாவ யாத்திரை என்றால் திமுக ஒரு பாவக்கடல். அந்தப் பாவக்கடலில் மூழ்கப்போகும் முதல் நபர் நமது முதலமைச்சர் ஸ்டாலினாக தான் இருப்பார். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.