என்ன நடக்கிறது..? இந்தியாவில் அடுத்ததடுத்து மாயமாகும் லட்சக்கணக்கான பெண்கள்.. மர்மம்

புதுடெல்லி:
இந்தியாவில் அடுத்தடுத்து லட்சக்கணக்கான பெண்கள் மாயமாகி வருவது ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. 3 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்தியாவில் மாயமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக மாயமாகி உள்ளதாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் கூறப்பட்டிருந்தது. பாஜகவின் ஆதரவோடு வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு கேரள அரசு மறுப்பு தெரிவித்திருந்ததோடு எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாக கூறியது.

இந்த திரைப்படம் வெளியான சில தினங்களிலேயே, குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாயமானதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் குஜராத்தில் பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெறுவதால் இதுகுறித்து மத்திய அரசோ, குஜராத் அரசோ எந்த பதிலும் அளிக்கவில்லை.

பயங்கரம்..! பாகிஸ்தானில் அரசியல் மாநாட்டில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.. 40 பேர் உடல் சிதறி பலி

இந்நிலையில்தான், மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலை தேசிய குற்ற ஆவணக் காப்பம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2019 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில் 10 லட்சத்து 61 ஆயிரத்து 648 பெண்கள் மாயமாகியுள்ளனர். இதில் 2021-ம் ஆண்டில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 75 ஆயிரத்து 58 பெண்கள் மாயமாகி உள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேசம் மற்றும மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் அதிக அளவிலான பெண்கள் மாயமாகியுள்ளனர்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.