சண்முக பாண்டியனின் ‛படை தலைவன்'

நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் கடந்த 2015ம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தில் அறிமுகமானார். அடுத்து ‛மதுரை வீரன்' என்ற படத்தில் நடித்த சண்முக பாண்டியன், அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது சண்முக பாண்டியன் தனது மூன்றாவது படமாக அன்பு என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டிலை சிறு வீடியோ உடன் அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு படை தலைவன் என பெயரிட்டுள்ளனர். யானைகள் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளதை முன்னோட்ட வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.