திருப்பதி திருமலையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
திருப்பதிதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாதாரணமாகவே ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் கணிசமாக அதிகரித்து வருகிறது.கொட்டித்தீர்த்த கனமழைஇதனால் வார இறுதி நாட்கள் மற்றும் சனிக்கிழமைககளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் நேற்று திருப்பதி திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு திருமலை திருப்பதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை… சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!விடிய விடிய கனமழைநேற்று மாலை 7 மணிக்கு தொடகிய மழை விடிய விடிய வச்சு செய்தது. விடிய விடிய கொட்டிய கனமழையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் திருமலையில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.
கடும் குளிரால் அவதிபலத்த காற்றுடன் கொட்டிய மழையால் கடுமையான குளிரும் நிலவியது. இதனால் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இடி மின்னல் என கனமழை பெய்ததால் மலைப்பகுதியில் வெட்ட வெளியில் படுத்திருந்த பக்தர்கள் தவித்து போயிவிட்டார்கள்.
பேரழகியாக அதிதி ஷங்கர்… ஹார்ட்டின்களை குவிக்கும் ரசிகாஸ்!மூழ்கிய வாகனங்கள்
வெள்ளம் ஆற்றுநீர் போல் பெருக்கெடுத்து ஓடியதால் நடைபாதைகளே தெரியவில்லை. இதேபோல் வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடியது. இதனால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. திருமலையில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் வணிகர்களும் பாதிக்கப்பட்டனர்.
இன்றும் மழைவிடிய விடிய கொட்டிய மழையால் திருமலையின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இன்று மாலையும் திருப்பதி திருமலையில் மழைக்கான வாய்ப்புள்ளதால் பக்தர்கள் முன்னேற்பாடுகளுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். திருமலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சந்திரயான் 3 சக்சஸ்… அடுத்து ஆதித்யா எல்1… சூரியனுக்கு குறி வைக்கும் இஸ்ரோ… தேதி குறிச்சாச்சு!வைகுந்தம் காம்ப்ளக்ஸ்திருப்பதியில் நேற்று 71,0 73 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 37,215 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் காணிக்கையாக 3.67 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று சனிக்கிழமை என்பதால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸின் அத்தனை கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்தது
திருப்பதியில் மிகப்பெரிய மாற்றம்: தேவஸ்தானத்தின் முழு கன்ட்ரோலும் இனிமே இவங்கக்கிட்டதான் – ஜெகன் போட்ட ஆர்டர்!பக்தர்கள் அச்சம்இதனிடையே திருப்பதி திருமலையில் சிறுத்தைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. சிறுத்தைகளின் தாக்குதல்களால் பக்தர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மலைப்பாதைகளில் நிறுவப்பட்டுள்ள 300 கேமராக்களில், 50 கேமராக்களில் இதுவரை சிறுத்தைகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெருங்கும் வடகிழக்கு பருவமழை… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய மின்வாரியம்!திருப்பதியில் வெளுத்து வாங்கிய மழை