முடிவுக்கு வந்தது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7

நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஆரம்பமான இந்நிகழ்வு நேற்று டிசம்பர் 17ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியோடு 15 வாரங்கள் நடைபெற்றுள்ளது.

இறுதிப் போட்டியில் பல்லவி பிரசாந்த் என்ற போட்டியாளர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்து விவசாயி பல்லவி பிரசாந்த். அவருடைய எளிமைதான் அவரை வெற்றி பெற வைத்தது என்கிறார்கள். யு டியூப் மூலம் பிரபலமானவர் பிரசாந்த். அவரை 'ரைத்து பிட்டா' என்று அன்போடு அழைக்கிறார்கள் ரசிகர்கள்.

மற்ற போட்டியாளர்களை விடவும் பிரசாந்த் அதிக வாக்குகள் பெற்று வென்றுள்ளார். நேற்றைய இறுதிப் போட்டியில் சினிமா பிரபலங்களான ரவி தேஜா, அல்லரி நரேஷ், ராஜ் தருண், கல்யாண் ராம், நிதி அகர்வால், ஆஷிகா ரங்கநாத், சம்யுக்தா மேனன், நோ ஷெட்டி, சுமா கனகலா, அவரது மகன் ரோஷன் கனகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழஙகும் பிக் பாஸ் சீசன் 7, இதுவரையில் 11 வாரங்களைக் கடந்துள்ளது. இன்னும் நான்கு வாரங்களுக்குள் இதன் இறுதி போட்டி நடைபெறலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.