கோவா-வில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்த பெங்களூரைச் சேர்ந்த சுசனா சேத் என்ற பெண் தன்னுடன் அழைத்து வந்த 4 வயது மகனை கொலை செய்ததாக கர்நாடகாவில் நேற்று கைது செய்யப்பட்டார். 4 வயது குழந்தையின் வாயில் தலையணை அல்லது துணியை வைத்து அழுத்தி மூச்சு திணறல் ஏற்படுத்தி சாகடித்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் சடலம் தந்தை வெங்கட்ராமனாவிடம் ஒப்படைக்கப்பட்டு பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் இறுதி மரியாதை செய்யப்பட்டது. […]
