இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டாபிங் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு..

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டாபிங் மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் இடையில் நேற்று (10) சந்திப்பொன்று இடம்பெற்றுது.

இதன்போது இந்தோனோசியாவில் நடைபெறவுள்ள நீர் சம்பந்தமான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தூதுவர் அமைச்சர் ஜீவனுக்கு அழைப்பு விடுத்தார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தல் மற்றும் அரசியல், பொருளாதார காரணிகள் தொடர்பிலும் இருவரும் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

மேலும், அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், கொள்கை ரீதியில் ஏற்படவுள்ள மாற்றங்கள், எதிர்கால வேலைத்திட்டங்களுக்கான வியூகங்கள் தொடர்பில் தூதுவருக்கு அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அனைவருக்கும் சுகாதார பாதுகாப்புடன் குடிநீரை தடையின்றி வழங்குவதற்காகவும், நீர் கட்டமைப்பை ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

அத்துடன், மலையக பெருந்தோட்ட பகுதிகளின் நிலவரம், அதனை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், அதற்கு இந்தோனேசியா எவ்வாறு பங்களிப்பு வழங்கலாம் என்பன பற்றியும் இருவரும் கலந்துரையாடினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.