நியூயார்க்: ரெயில் நிலைய சுரங்கப்பாதையில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி

நியூயார்க்,

நியூயார்க்கின் பிராங்க்ஸில் உள்ள மவுண்ட் ஈடன் ஏவ் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் ரெயிலில் பயணித்த 2 இளைஞர் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரெயில் நிலையத்தில் இறங்கி சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த இளைஞர் குழுவிலுள்ள ஒரு நபர் பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 34 வயதான பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதை நிகழ்த்திய அந்த நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.