போர்ச்சுகலில் போராட்டம் நடத்திய பாகிஸ்தானியர்களுக்கு இந்திய தூதரகம் பதிலடி

புதுடெல்லி: ​போர்ச்​சுகலில் போராட்​டம் நடத்​திய பாகிஸ்​தானியர்​களுக்கு பதிலடி கொடுக்​கும் வகை​யில், ‘ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் முடிய​வில்லை’ என்ற வாசகம் அடங்​கிய போஸ்​டரை ஒட்டி இந்​தியா பதிலடி கொடுத்​துள்​ளது.

போர்ச்​சுகல் நாட்​டுக்​கான இந்​திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “போர்ச்​சுகல் நாட்​டில் உள்ள இந்​திய தூதரக அலு​வல​கத்​துக்கு வெளியே பாகிஸ்​தானியர்​கள் கோழைத்​தன​மாக போராட்​டம் நடத்​தினர். இதற்கு அமை​தி​யாகபதிலடி தரும் வகை​யில், ‘ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் முடிய​வில்​லை’ என்ற வாசகம் அடங்​கிய போஸ்​டர் அலு​வல​கத்​துக்கு வெளியே ஒட்​டப்​பட்​டுள்​ளது.

தூதரக அலு​வல​கத்​தின் பாது​காப்பை உறுதி செய்​வதற்கு ஆதரவு அளித்த போர்ச்சுகல் அரசுக்​கும் அதன் காவல் துறை​யினருக்​கும் நன்​றி. இது​போன்ற ஆத்​திரமூட்​டும் செய​லால் இந்​தி​யாவை மிரட்ட முடி​யாது. எங்​கள் நிலைப்​பாடு அசைக்க முடி​யாதது” என கூறப்​பட்​டுள்​ளது. இத்​துடன் அந்த போஸ்​டர் தொடர்​பான புகைப்​படங்​களும் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.