`ஸ்மார்ட் சிட்டி' பெயரில் 70,000 பேரிடம் ரூ..2700 கோடி வசூல்; அதிர வைத்த மெகா மோசடி..

`வீடு, நிலம், அதிக வட்டி..’ ஆசையை தூண்டி மோசடி

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் சுபாஷ், ரன்வீர் சொந்தமாக நெக்சா எவர்கிரீன் என்ற கம்பெனியை தொடங்கி நடத்தி வந்தனர்.

இதில் தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி மற்றும் குஜராத்தில் உருவாக்கப்பட்டு வரும் தோலேரா ஸ்மார்ட் சிட்டியில் காலி நிலம் கொடுப்பதாக ஆசை வார்த்தைகளை கூறினர்.

அதோடு புதிய வாடிக்கையாளர்களை அழைத்து வருபவர்களுக்கு கமிஷன், சன்மானம், கிப்ட் போன்றவற்றை இரண்டு சகோதரர்களும் வாரி வழங்கினர்.

மோசடி சகோதரர்கள்

கம்பெனிக்கு அதிக முதலீடு கொண்டு வருபவர்களுக்கு லேப்டாப், பைக், கார்களை கிப்டாக கொடுத்து ஊக்கப்படுத்தினர். அதோடு கூடுதல் வாடிக்கையாளர்களை அழைத்து வந்தால் கமிஷன் தொகையை அதிகரித்து கொடுப்பதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் தோலேராவில் 2014-ம் ஆண்டு ரன்வீர் நிலம் வாங்கினார். அதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுபாஷும் தோலேராவில் நிலம் வாங்கினார். அதனை தொடர்ந்தே சகோதரர்கள் இரண்டு பேரும் சேர்ந்து 2021-ம் ஆண்டு `நெக்‌சா எவர்கிரீன்’ என்ற பெயரில் கம்பெனியை தொடங்கி அகமதாபாத்தில் பதிவு செய்தனர்.

மோசடி விளம்பரம்

தோலேரா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதிதான் நெக்‌சா எவர்கிரீன் என்று விளம்பரம் செய்து அதிக அளவில் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை திரட்டினர். அதோடு தங்களிடம் 700 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அதில் சர்வதேச அளவில் சிறந்த ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கப்போவதாகவும் விளம்பரம் செய்தனர்.

இதனால் பொதுமக்கள் அதிக அளவில் இக்கம்பெனியில் முதலீடு செய்தனர். நிலம், வீடு ஆசை காட்டி 70,000 பேரிடம் ரூ.2700கோடியை வசூலித்தனர்.

பண மோசடிகள்…

மோசடி பணத்தில் ஆடம்பர வாழ்க்கை

இந்த `நெக்‌சா எவர்கிரீன்’ ரியல் எஸ்டேட் கம்பெனி, உயர் அதிகாரிகளை நியமித்ததுடன் ஆயிரக்கணக்கானோரை கமிஷன் ஏஜென்டுகளாகவும் நியமித்தனர்.

அவர்கள் அழைத்து வந்த ஏஜெண்ட்களுக்கு கமிஷனாக மட்டும் ரூ.1500 கோடியை கொடுத்தனர். பின்னர் மோசடி பணத்தில் 700 ஏக்கர் நிலம் வாங்கினர். அதோடு ஆடம்பர கார்கள், சுரங்கம், ஹோட்டல்கள், கோவாவில் 25 ரிசார்ட்கள் போன்றவற்றுடன் ஆடம்பரமாக வாழ்ந்தனர். அவர்களிடம் ரொக்க பணம் மட்டும் ரூ.250 கோடி இருந்தது. இந்நிலையில் சகோதரர்கள் இரண்டு பேரும் ராஜஸ்தானில் செயல்பட்டு வந்த தங்களது அலுவலகங்களை இழுத்து மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சகோதரர்களை தேடி வருகின்றனர். இந்த மோசடி குறித்து அமலாக்கப்பிரிவும் விசாரித்து வருகிறது. அமலாக்கப்பிரிவு 25 இடங்களில் ரெய்டு நடத்தி உள்ளது.

`தோலேரா ஸ்மார்ட் சிட்டி’ பெயரை பயன்படுத்தியது ஏன்?

மத்திய அரசும், குஜராத் அரசும் சேர்ந்து தோலேரா ஸ்மார்ட் சிட்டியை குஜராத்தில் கட்டி வருகிறது. இது டெல்லியை விட இரண்டு மடங்கு பெரிதாகும். இதில் பன்னாட்டு விமான நிலையம், பன்னாட்டு நிறுவனங்கள் என அனைத்தும் இருக்கும். இத்திட்டம் 2042-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.