ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை மீட்கும் இந்தியா

அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர். இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “நேபாளம் மற்றும் இலங்கை அரசுகளின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மீட்டு அனுப்பி வைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது. நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் டெலிகிராம் வாயிலாகவோ அல்லது +989010144557, +989128109115, +989128109109 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.