மேட்​டூருக்கு நீர்​வரத்து 22,469 கனஅடி​யாக அதி​கரிப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: கர்​நாடகத்​தில் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை பெய்து வரு​வ​தால், அங்​குள்ள அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. கபினி அணை முழு கொள்​ளளவை எட்​டிய நிலை​யில், உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​பட்​டுள்​ளது.

இதன் காரண​மாக மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 8,218 கனஅடி​யாக​வும், மாலை 16,341 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று காலை 18,220 கனஅடி​யாக​வும், மாலை 22,469 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது.

அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 16,000 கனஅடி வீதம் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 113.81 அடி​யாக​வும், நீர் இருப்பு 83.94 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் மாலை​யில் 17 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடி​யாக அதிகரித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.