ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 50,000 கனஅடியாக உயர்வு: மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

தருமபுரி / மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்​நாடகா மாநில காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​து​வரும் கனமழை​யால் கர்​நாடக மாநிலத்​தில் உள்ள கபினி, கிருஷ்ண​ராஜ சாகர் அணை​கள் வேக​மாக நிரம்பி வரு​கின்​றன. அணை​களின் பாது​காப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​படு​கிறது.

இதனால், தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து படிப்​படி​யாக அதி​கரித்து வரு​கிறது. நேற்று முன்​தினம் மாலை​ 16,000 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 32,000 கனஅடி​யாக​வும், மாலையில் 50,000 கனஅடி​யாக​வும் உயர்ந்​தது. இதனால் ஒகேனக்​கல் பிர​தான அருவிக்கு செல்​லும் நடை​பாதை தண்​ணீரில் மூழ்​கி​யுள்​ளது. மேலும், பிர​தான அருவி உள்​ளிட்ட இடங்​களில் வெள்​ளம் ஆர்ப்​பரித்து ஓடு​கிறது.

வெள்​ளப்​பெருக்கு காரண​மாக ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட ஆட்​சி​யர் சதீஷ் உத்​தர​விட்​டுள்​ளார். மேலும், ஆற்​றி​லும், அருவி​களி​லும் குளிக்க 3 நாட்​களுக்கு முன்பு அறிவிக்​கப்​பட்ட தடை​யும் தொடர்ந்து அமலில் உள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 7,815 கன அடி​யாக​வும், மாலை 13,332 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று காலை 18,290 கனஅடி​யாக​வும், மாலை 37,263 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது.

அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் தண்​ணீரின் அளவு 20,000 கனஅடியி​லிருந்து 22,500 கனஅடி​யாக அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது. தண்ணீர் திறப்​பை​விட நீர்​வரத்து அதி​க​மாக உள்​ள​தால் நீர்​மட்​டம் உயர்ந்து வரு​கிறது. அணை நீர்​மட்​டம் நேற்று 112.73 அடியி​லிருந்து 113.05 அடி​யாக​வும், நீர் இருப்பு 82.34 டிஎம்​சியி​லிருந்​து 82.81 டிஎம்​சி​யாக​வும்​ உயர்​ந்​தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.