கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

விருதுநகர்: இங்​கிலாந்து பல்​கலைக்​கழகம் ஆய்வு முடிவு அறிக்கை வெளி​யிட்​டு​விட்​டது. இனி​யா​வது மத்​திய அரசு கீழடி அகழாய்வு அறிக்​கையை வெளி​யிடுமா என்று அமைச்​சர் தங்​கம் தென்​னரசு கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இது தொடர்​பாக தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில் குறிப்​பிட்​டிருப்​ப​தாவது: கீழடி​யில் கிடைத்த மனித மண்டை ஓடு​களை அறி​வியல் வழி​யில் ஆய்வு செய்​து, 2,500 ஆண்​டு​களுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவ​மைத்​துள்​ளது இங்​கிலாந்​தின் லிவர்​பூல் ஜான் மூர்ஸ் பல்​கலைக்​கழகம்.

கீழடி​யில் தமிழ் மக்​கள் நாகரி​கத்​தில் சிறந்​தவர்​களாக வாழ்ந்​தார்​கள் என்​ப​தற்​கான அறி​வியல் சான்​றுகள் ஒன்​றின் பின் ஒன்​றாக உலக அரங்​கில் நிரூபிக்​கப்​படு​வது மட்​டற்ற மகிழ்ச்​சி​யைத் தரு​கிறது. இதற்​குப் பின்​ன​ராவது மத்​திய அரசு கீழடி அறிக்​கையை வெளி​யிடுமா? இவ்​வாறு தங்​கம் தென்​னரசு பதி​விட்​டுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.