திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சனம்

திருப்புவனம்: ​தி​முக ஆட்சி என்​றாலே அராஜகம்​தான் என்று தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா கூறி​னார்.

சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலைக்கு நீதி கேட்டு தேமு​திக சார்​பில் திருப்​புவனத்​தில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பிரேமலதா பேசி​ய​தாவது: அஜித்​கு​மாரை போலீ​ஸார் அடித்தே கொன்​றுள்​ளனர். அவரைக் கொன்​றவர்​களுக்​கும் இது​போன்ற தண்​டனை கொடுக்க வேண்​டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசா​ரிக்​க​வில்​லை. எனவே, இவ்​விவ​காரத்​தில் சிபிஐ உண்​மையை வெளிக்​கொணர வேண்​டும்.

தமிழகத்​தில் கடந்த ஒரு வாரத்​தில் வரதட்​சணைக் கொடுமை​யால் 4 பெண்​கள் தற்​கொலை செய்​துள்​ளனர். போதைப் பொருட்​கள் புழக்​கம் அதி​கரித்​து​விட்​டது. போதை வழக்​கில் 2 நடிகர்​களை கைது செய்​து, இந்த விவ​காரத்தை திசை திருப்​பு​கின்றனர். திமுக ஆட்சி என்​றாலே அராஜக​மும், ரவுடி​யிச​மும்​தான். அனைத்து காவல் நிலை​யங்​களி​லும், கைதி​களை விசா​ரிக்​கும் இடங்​களி​லும் சிசி​விடி கேம​ராக்​களை பொருத்த வேண்​டும். மக்​கள் புரட்சி வெடித்​தால் காவல் துறை தாங்​காது. மது ஒழிந்​தால்​தான் தமிழகத்​துக்கு விடிவு​காலம் பிறக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார். தொடர்ந்​து, அஜித்​கு​மார் வீட்​டுக்​குச் சென்​று, அவரது குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரி​வித்​தார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “நிகி​தாவுக்கு ஆதர​வாக செயல்​படும் அதி​காரி​கள் யார் என்ற விவரங்​களை வெளி​யிட வேண்​டும். கனிமவளக் கொள்​ளை, லஞ்சம், ஊழல், போதைப் பொருள் புழக்​கம் போன்ற பிரச்​சினை​களை திசை​திருப்ப ஓரணி​யில் தமிழ்​நாடு என்ற முழக்​கத்தை கையில்​ எடுத்​துள்​ளனர்​” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.