மராத்தா சமுதாயத்தின் 6 கோரிக்கைகள் ஏற்பு: உண்ணாவிரதத்தை முடித்தார் ஜாரங்கே

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வில் மராத்தா சமூகத்​தினர் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். இந்த சமூகத்​தில் 96 குலி மராத்​தா, குன்பி ஆகிய இரு பிர​தான பிரிவு​கள் உள்​ளன. இதில் 96 குலி மராத்தா முன்​னேறிய வகுப்​பின​ராக​வும், குன்பி சமு​தா​யத்​தினர் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பின​ராக​வும் (ஓபிசி) அங்​கீகரிக்​கப்​பட்டு உள்​ளனர்.

இந்த சூழலில் 96 குலி மராத்தா பிரி​வினரை​யும் ஓபிசி பிரி​வில் சேர்க்க வேண்​டும் என்று மராத்தா சமு​தாய தலை​வர் மனோஜ் ஜாரங்கே பாட்​டீல் கோரிக்கை விடுத்​துள்​ளார். இதை முன்​னிறுத்தி கடந்த 29-ம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்​தில் அவர் கால​வரையற்ற உண்​ணா​விரத போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். அவரோடு சுமார் 40,000-க்​கும் மேற்​பட்ட மராத்தா சமு​தா​யத்​தினர் மும்​பை​யில் குவிந்​தனர்.

இதனால் மும்​பை​யின் சாலை போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​தது. சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை​யும் எழுந்​தது. இதனிடையே மகா​ராஷ்டிர அமைச்​சர்​கள் ராமகிருஷ்ண விக்கே பாட்​டீல், மாணிக்​ராவ் கோகடே, சிவேந்​திர ராஜே போஸ்லே ஆகியோர் மும்பை ஆசாத் மைதானத்​துக்கு சென்று மராத்தா சமு​தாய தலை​வர் மனோஜ் ஜாரங்​கே​விடம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உண்​ணா​விரதத்தை ஜாரங்கே முடித்​துக் கொண்​டார். இதுகுறித்து போராட்​டக் குழு​வினர் கூறும்​போது, “எங்​களது 8 கோரிக்​கை​களில் 6 கோரிக்​கைகளை அரசு ஏற்​றுக்​ கொண்​டுள்​ளது” என்​று தெரிவித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.