சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து, கிருஷ்ணராஜ சாகர் உள்பட சில அணைகிளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று […]