
புதுடெல்லி: டெல்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.