"தாலி கட்டும் நேரத்தில் ரோஷன் கண்கலங்கிவிட்டார்!" – காதலன் பற்றி நடிகை ஜனனி

‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜனனி.

அப்படத்தைத் தொடர்ந்து ‘தெகிடி’, ‘பலூன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

Actress Janani
Actress Janani

சில நாட்களுக்கு முன்பு, ஜனனிக்கும் அவருடைய காதலனான சாய் ரோஷனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணம் பற்றியும், அவர்களுடைய முதல் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்தும் ஜனனி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், “தமிழ் புத்தாண்டு எங்களுக்கு ஒரு புதிய தொடக்கம். என் பெற்றோர் தமிழ் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவே கடவுள் சிலையை வைத்து அலங்கரிப்பார்கள்.

மறுநாள் காலை அதைப் பார்த்துதான் நாங்கள் விழிப்போம். என் கணவர் ரோஷனுடன் நான் கொண்டாடும் முதல் தமிழ் புத்தாண்டு என்பதால், எங்கள் கொண்டாட்டத்தில் இதையும் சேர்த்துக் கொள்ளப் போகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இருவரின் பாரம்பரியத்தையும் நாங்கள் பின்பற்றுவோம்.

janani

நாங்கள் கணவன் – மனைவி என்பது இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது. எனக்கு அவர் எப்போதும் சிறந்த நண்பர்தான். திருமணமான புதிதில் வரும் பொறுப்புகளை உணர்ந்து அவற்றை ரசித்து வருகிறோம்.

திருமணத்தன்று தாலி கட்டும் நேரத்தில் ரோஷன் கண்கலங்கிவிட்டார். அவர் அழுதால் நானும் அழத் தொடங்கிவிடுவேன் என்பதால், அவரை அழ வேண்டாம் என்று அப்போது அவரிடம் சொன்னேன்.

தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு அடுத்தடுத்து வருவதால் இது எங்களுக்கு இரட்டைக் கொண்டாட்டம்.” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.