மே-27: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சரின் வீடுகளில் ரெய்டு

மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்கனவே 2 அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு குடைச்சல் தரும் வகையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் இம்மாநிலத்தை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சரும், சிவசேனா தலைவருமான அனில் பரப்வுக்கு சொந்தமான புனே, மும்பை மற்றும் தபோலி உட்பட 7 இடங்களில் உள்ள  வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை நேற்று அதிரடியாக சோதனை நடத்தியது. கடந்த மார்ச் மாதம் அனில் பரப்புக்கு நெருக்கமாக நபர்கள், … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,307,450 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.07 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,307,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 530,112,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 500,536,356 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,729  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீட்டுக்கு போய் சமையல் செய்… பாஜ தலைவர் சர்ச்சை பேச்சு

மும்பை: இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மும்பையில் நேற்று முன்தினம் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய பாஜ மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், `சுலே அவர்களே… இன்னும் ஏன் நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள்? வீட்டுக்கு சென்று சமையுங்கள். டெல்லி செல்லுங்கள் அல்லது மயானத்துக்கு செல்லுங்கள். எங்களுக்கு தேவை ஓபிசி இடஒதுக்கீடு’ என பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகி உயுள்ளது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அணி … Read more

அதானி துறைமுகத்தில் ரூ.500 கோடி கோகைன் பறிமுதல் போதை பொருட்கள் கடத்தல் தலைநகராக மாறும் குஜராத்: வெளிநாட்டில் இருந்து வந்த கன்டெய்னர்களில் பதுக்கல்

புஜ்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தபிறகு, சர்வதேச சந்தைகளில் அதிக விலை மதிப்புமிக்க போதை பொருட்களின் கடத்தல் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, போதை பொருட்கள் கடத்தலின் தலைநகரமாக குஜராத்தும் மாறி வருகிறது. கடந்தாண்டு செப்டம்பரில் முந்த்ரா துறைமுகத்திற்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட  3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதை பொருள் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி. இந்தியாவில் இதற்கு முன் இந்தளவுக்கு பெரியளவில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது கிடையாது. ஒன்றியத்தில் பாஜ … Read more

ஆட்டோவில் சென்ற நடிகையை அவமதித்த இன்ஸ்பெக்டர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: மலையாளத்தில் ‘நீலத்தாமரை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அர்ச்சனா கவி. பிறகு சால்ட் அன்ட் பெப்பர், பெஸ்ட் ஆப் லக், ஸ்பானிஷ் மசாலா, நாடோடி மன்னன் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரவான், ஞானக்கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இரவில் தன்னுடைய தோழிகளுடன் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஆட்டோவை மறித்த மட்டஞ்சேரி … Read more

டெல்லி ஸ்டேடியத்தில் வீரர்களை விரட்டியடித்து நாயுடன் வாக்கிங் சென்ற ஐஏஎஸ் தம்பதி இடமாற்றம்: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: டெல்லி தியாகராஜா ஸ்டேடியத்தில் வீரரர்களை விரட்டியடித்து நாயுடன் வாக்கிங் செல்ல ஐஏஎஸ் அதிகாரி தம்பதி அதிரடியாக ஒன்றிய அரசு இடமாற்றம் செய்துள்ளது. டெல்லியில் விளையாட்டு வீரா்கள், குறிப்பாக தடகள வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு தியாகராஜா மைதானம் உள்ளது. இங்கு வீரர்கள் இரவு 8.30 மணி வரையும் பயிற்சி மேற்கொள்வார்கள். இந்த சூழலில் டெல்லி அரசின் வருவாய்துறை முதன்மை செயலாளர் சஞ்சீவ் கிர்வார் மற்றும்  அவருடைய மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான ரிங்கு துக்கா ஆகியோர் அங்கு நாயுடன் … Read more

வங்கி கணக்கில் மீன்பிடி தடைகால நிவாரண தொகை

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைகாலத்தில் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணத்தொகை ₹5000 வீதம் ₹95 கோடி வழங்கப்படும்.  இத்திட்டத்தை துவக்கி வைக்கும் முகமாக நேற்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பும் வகையிலான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் … Read more

விசாரணையில் ஆளுங்கட்சியினரின் தலையீடா? நடிகை புகாரில் விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர் விசாரணையும் நடக்கிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘பலாத்கார வழக்கில் முதலில் இருந்த வேகம் தற்போது இல்லை. விசாரணையில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதுதான் இதற்கு காரணம். எனவே, உயர் நீதிமன்றம் தலையிட்டு முறையாக … Read more

சென்னையில் நாளை பாமக சிறப்பு பொதுக்குழு அன்புமணியை தலைவராக அறிவிக்க திட்டம்

சென்னை: பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் 28ம் தேதி (நாளை) காலை 11 மணியளவில் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் அன்புமணி கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தலைவர் ஜி.கே.மணியும் ஆதரவு தெரிவித்துள்ளாராம். ஜி.கே. மணிக்கு ஆலோசகர் பதவி வழங்கப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.