இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை குறைந்துள்ளது: டாவோஸ் மாநாட்டில் மத்திய மந்திரி ஜோஷி பேச்சு

டாவோஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 56-வது உலக பொருளாதார மாநாடு 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து மத்திய மந்திரிகள், மராட்டியம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், டாவோஸ் மாநாட்டில் மத்திய மந்திரி ஜோஷி பேசும்போது, ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது என்பது வளர்ச்சிக்கு ஒரு சுமையல்ல. அதுவே வளர்ச்சிக்கான இயந்திரம் என்பதே இந்தியாவின் செயல்பாட்டுக்கான திட்டம் ஆகும். அதனாலேயே இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க … Read more

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று இறுதி விசாரணை

புதுடெல்லி, கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் அப்போதைய பொருளாளராக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய சைதை துரைசாமி, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி … Read more

’3வது இடத்தில் இஷான் கிஷன்’…இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ்

சென்னை, நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் டி20 தொடரில் 3வது இடத்தில் இஷான் கிஷன் களம் இறங்குவார் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். காயத்தால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளில் இருந்து திலக் விலகியதால் இஷான் கிஷனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நாக்பூரில் தொடங்கும் நிலையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூர்யகுமார், ”ஒரு தொடரில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் … Read more

பாகிஸ்தான்: அடர்பனியால் வாகனங்கள் மோதல்; 5 பேர் பலி, 8 பேர் காயம்

பஞ்சாப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் சிக்கி பள்ளி குழந்தை உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் காயம் அடைந்தனர். இதில் முதல் சம்பவத்தில், நான்கானா சாகிப் பகுதியில் புச்சிகீ சாலையில் பள்ளி வேன் ஒன்றும் பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டது. அடர்ந்த பனியால் தெளிவற்ற பார்வைநிலையால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் வேன் ஓட்டுநர் அஸ்கார் (வயது 35), துராப் அலி (வயது 15) … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான புகாரை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

புதுடெல்லி, ராஜஸ்தானில், மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அம்மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட், ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விசாரணை நடத்தவும், வழக்கு பதிவு செய்யவும் முழு அதிகாரம் உள்ளது’ என தீர்ப்பளித்தது. ராஜஸ்தான் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக, மத்திய அரசு ஊழியர் தரப்பில் … Read more

பிக்பாஷ் டி20 லீக்: சிட்னியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெர்த்

பெர்த் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற சிட்னி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறக்கிய பெர்த் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பின் அலென் அதிகபட்சமாக 49 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி … Read more

அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி-பிரான்சுக்கு டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபைக்கு மாற்றாக கருதப்படும் இந்த அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மியாமில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் அமைதி வாரியத்தில் … Read more

ஆபாச வீடியோ விவகாரம்; போலீஸ் டி.ஜி.பி பணி நீக்கமா? கர்நாடக மந்திரி பதில்

பெங்களூரு, போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சர்ச்சை வீடியோ வெளியானதை அடுத்து போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும். விசாரணைக்கு பிறகு என்ன விஷயங்கள் நடந்தது என்பது தெரியவரும். அதன்பிறகு அவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரை பணி நீக்கம் செய்ய முடியும். அவர் என்னை சந்திக்க எனது வீட்டுக்கு வந்தார். அவரை சந்திக்க நான் மறுத்துவிட்டேன். … Read more

மகளிர் பிரீமியர் லீக்: மும்பையை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

காந்தி நகர், 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குஜராத்தின் வதோதராவில் இன்று நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியனஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த … Read more

உலக பாதுகாப்புக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு தேவை: வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதித்து வந்த அவர், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவை இலக்காக கொண்டு செயல்பட்டார். இதனால் அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கான முடிவு என்னவென தெரிவதற்குள், வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்களை கொள்முதல் செய்துள்ளார். இதன்பின்னர், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்புகள் … Read more