உக்ரைனுக்கு 90 பில்லியன் யூரோ நிதியுதவி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

பிரசல்ஸ், ரஷியா உடனான போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலதன சந்தையில் இருந்து 90 பில்லியன் யூரோ நிதி திரட்டி, அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லெயன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ரஷியா போர் இழப்பீடுகளை தரும் … Read more

சத்தீஷ்கார்: யானை தாக்கி இளைஞர் பலி

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கர்பா மாவட்டம் கவுபரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் மகேந்திர சிங் (வயது 35). இவர் இன்று காலை தனது வீட்டிற்கு வெளியே தீ மூட்டி அதன் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை மகேந்திர சிங்கை தாக்கியது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், வனத்துறையினர் விரைந்து சென்று மகேந்திர சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி: இந்திய அணியில் 3 மாற்றங்கள்

ஆமதாபாத், இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் காயத்தால் அவதிப்படும் சுப்மன் கில் ஆகியோருக்கு … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

துபாய், மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஐக்கிய அரசு அமீரகம். இந்நாட்டின் துபாய், அபுதாபியில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. கனமழை காரணமாக துபாய், அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று காலை வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அதேபோல், கனமழையால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். 1 More update தினத்தந்தி Related Tags : United Arab Emirates  … Read more

ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கொலை: தலைமறைவாக இருந்த தம்பதி 16 ஆண்டுகளுக்குப்பின் கைது

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை மாவட்டம் கிழக்கு நலசொபுரா பகுதியில் கடந்த ஏப்ரல் 2009ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டார். பண விவகாரத்தில் நடந்த இந்த கொலையில் தர்மேந்திர ராமசங்கர் (வயது 54), அவரது மனைவி சோனு (வயது 50) உள்பட 4 பேருக்கு தொடர்பு இருந்தது. கொலையாளிகள் 4 பேரும் தலைமறைவான நிலையில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த … Read more

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்

மும்பை, 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு … Read more

சூடான்: துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் பலி

கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு … Read more

அரசு பேருந்தில் ரூ.8 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தல் – இருவர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் சோதனை சாவடி உள்ளது. இப்பகுதி தமிழக எல்லையில் உள்ளது. இந்த சோதனை சாவடியில் கலால் துறையினர், போலீசார் வாகன சோதனை நடத்தி, கடத்தி வரப்படும் போதைப்பொருளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வாளையார் சோதனை சாவடியில் கலால் துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து கொட்டாரக்கரை நோக்கி கேரள அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை கலால் துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் … Read more

ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு எளிய இலக்கு நிர்ணயித்த இலங்கை

துபாய், 19 வயதுக்குட்பட்டோருக்கான (ஜூனியர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்த தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. அதன்படி நடைபெறும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த ஆட்டம் மழை காரணமாக மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது. … Read more

வங்காளதேசம்: இந்து மத இளைஞர் அடித்துக்கொலை – உடலை நடுரோட்டில் தீ வைத்து எரித்த கும்பல்

டாக்கா, வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதன்மையாக செயல்பட்ட மாணவர் அமைப்பின் தலைவராக செயல்பட்டவர் ஷெரீப் ஒசாமா பெடி. இவர் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். இதனிடையே, தலைநகர் டாக்காவில் உள்ள சாலையில் ரிக்‌ஷாவில் சென்ற ஒசாமா பெடி மீது பைக்கில் வந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒசாமா சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். … Read more