ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்,  ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவது இந்தியாவின் நீண்ட கால கனவு ஆகும். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க மந்திரிகள் ஆண்டனி பிளிங்கனையும், லாயிட் ஆஸ்டினையும் ேநற்று முன்தினம் சந்தித்து பேசிய பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இது இடம் பெற்றுள்ளது. அந்த அறிக்கையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும், அணுசக்தி வினியோக குழுவில் இந்தியா இடம் பெறுவதற்கும் அமெரிக்கா … Read more

பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தை இந்தியா விரும்புகிறது – பாக். புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட ஷபாஷ் ஷெரீப் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.    இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஷ் ஷெரீப்பிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக … Read more

ஈஞ்சம்பள்ளி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் பெண்களுக்கான மாநில அளவிலான கிளித்தட்டு விளையாட்டு போட்டி- சிவகங்கை மாவட்ட அணிக்கு …

மொடக்குறிச்சி ஈஞ்சம்பள்ளி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் மாநில அளவில் நடந்த பெண்களுக்கான கிளித்தட்டு விளையாட்டு போட்டியில் சிவகங்கை மாவட்ட அணி முதல் பரிசை பெற்றது.  கிளித்தட்டு போட்டி இலங்கையில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு விளையாடும் புகழ்பெற்ற விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டு போட்டி ஈரோடு அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்றது. இதில் ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, கோவை, மேட்டுப்பாளையம் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 14 … Read more

#லைவ் அப்டேட்: கிழக்கு நகரங்கள் மீது ரஷியா விரைவில் மீண்டும் தாக்குதலை தொடங்கலாம் – உக்ரைன் எச்சரிக்கை

கீவ், உக்ரைன் மீது ரஷியா 48-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:- ஏப்ரல் 12, 2.05am உக்ரைனை தொடர்ந்து நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டும் பின்லாந்து – ரஷியா கடும் எதிர்ப்பு    ஏப்ரல்12, 2.00 am உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் … Read more

ரோப் கார்கள் விபத்து: ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரம்..!

ராஞ்சி, சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று பாபா வைத்யநாத் கோவில். இது ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ளது. திரிகுட் மலை மீது சென்று இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப் கார் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் இதுவாகும். 1,500 அடி உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைந்துள்ள இந்த ரோப் கார் 766 மீட்டர் … Read more

ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 21 -வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். அதன்படி குஜராத் அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மத்தீவ் வேட்டும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். வேட் 19 ரன்னிலும், கில் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  சாய் சுதர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், … Read more

பாகிஸ்தானில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் – இம்ரான் கான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட ஷபாஷ் ஷெரீப் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.    இந்நிலையில்,  உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக இம்ரான்கான் தனது … Read more

ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது – சரத்பவார்

மும்பை,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று அமராவதியில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-  மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலமும், மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைகளை உருவாக்குவதன் மூலமும், தலைவர்களுக்கு எதிரான விசாரணையை நடத்துவது மூலமும், ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த முயற்சியை தேசியவாத காங்கிரஸ் முறியடித்து, அதற்கு எதிராக முழு பலத்துடன் போராடும். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய … Read more

ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

மும்பை, நடப்பு 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 21 -வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். இதனையடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்திவ் வெய்ட், சுப்மன் கில் களமிறங்கினர். வெய்ட் 19 ரன்னிலும், கில் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த சாய் சுதர்சன் 11 … Read more

இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக எம்.பி.க்களுடன் இலங்கை அதிபர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

கொழும்பு,  வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், பிரதமர், அதிபர் தவிர அனைத்து அமைச்சர்களும் ஏற்கனவே பதவி விலகி இருந்தனர். இதைத்தொடர்ந்து 4 மந்திரிகளை மட்டுமே அதிபரால் நியமிக்க முடிந்தது. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக அனைத்துக்கட்சி இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எதிர்க்கட்சிகள், இடைக்கால … Read more