டிட்வா புயல்: இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 53 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு; கர்ப்பிணிகள், முதியவர்கள் மீட்பு

கொழும்பு, இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து … Read more

வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல்தொடர்பு செயலிகளை பயன்படுத்த சிம் கார்டு இணைப்பு கட்டாயம்

புதுடெல்லி, சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து குறுஞ்செய்தி செயலிகளும் இனி சிம் கார்டுடன் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. செயலியை பயன்படுத்தும் சாதனத்தில், கணக்கை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட அதே சிம் கார்டு இருந்தால்தான் தொடர்ந்து சேவையை பெற முடியும். சிம் கார்டு இல்லாவிட்டால், சேவை முடக்கப்படும். இந்த புதிய விதிமுறைகளை செயல்படுத்த, செயலிகளை இயக்கும் … Read more

முதல் டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

கிறைஸ்ட்சர்ச், வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்த நிலையில் நியூசிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் … Read more

இஸ்ரேலில் ஊழல் வழக்கில் மன்னிப்பு கோரிய பிரதமர்

ஜெருசலேம், இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு அவர் மீது ஊழல், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. ஆனால் இவர் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்தநிலையில் பொதுமன்னிப்பு வழங்கி ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு 111 பக்கம் கொண்ட … Read more

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம், கேரளாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வெளிநாடுகளில் நிதி திரட்ட ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு லண்டன் மற்றும் சிங்கப்பூர் பங்குச்சந்தை மூலம் நிதி திரட்டுவதற்காக ரூ.2 ஆயிரத்து 672 கோடிக்கான ‘மசாலா’ கடன் பத்திரத்தை வெளியிட்டது. இந்த நிதியில் ரூ.466.91 கோடி முறைகேடாக நிலம் வாங்க பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து இதுகுறித்து விளக்கம் கேட்டு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் … Read more

இந்திய பெண்கள் ஆக்கி அணி பயிற்சியாளர் ராஜினாமா

புதுடெல்லி, இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருந்து வந்த ஹரேந்திர சிங் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இது குறித்து ஹரேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு பயிற்சி அளித்தது எனது வாழ்க்கையில் ஒரு சிறப்பம்சமாகும். தனிப்பட்ட காரணங்களுக்கான பயிற்சியாளர் பணியில் இருந்து விலகினாலும், இந்த அசாதாரணமான அணியுடனே எனது இதயம் நிலைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். Harendra Singh has decided … Read more

நைஜீரியா: மணப்பெண் உள்பட 13 பெண்களை கடத்தி சென்ற ஆயுத கும்பல் – பரபரப்பு சம்பவம்

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீப நாட்களாக … Read more

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது… குளிர்கால தொடரில் அனலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!

புதுடெல்லி, இந்திய நாடாளுமன்றம் சாதாரணமாக ஆண்டுக்கு 3 முறை கூட்டப்பட்டு வருகிறது. ஜனவரி – பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரும், ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் மழைக்கால கூட்டத்தொடரும், நவம்பர் அல்லது டிசம்பரில் குளிர்கால கூட்டத் தொடரும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. குறைவான நாட்கள் கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த மழைக்கால கூட்டத்தொடர், பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை … Read more

முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

ராஞ்சி, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க … Read more

ஆபரேசன் சாகர்பந்து… இலங்கையில் சிக்கி தவித்த இந்திய பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

கொழும்பு, துபாயில் இருந்து 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளுடன் விமானம் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. இலங்கை வழியே இந்தியா வர இருந்த விமானம், இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு தரையிறங்கியது. எனினும், வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவான டிட்வா புயல் எதிரொலியாக கனமழை பெய்தது. இதனால், இலங்கையில் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், இந்தியர்களை ஏற்றி … Read more