ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்; தனது குடிமக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன் டி.சி., ஈரான் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி … Read more

243 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: சித்தராமையா பெருமிதம்

கலபுரகி, கர்நாடகாவின் கலபுரகி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி சித்தராமையா, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக பொய் பேசுகின்றன. உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான நிதி அரசிடம் இல்லை என்று அவர்கள் எல்லா இடங்களிலும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். ஜெவர்கி என்ற ஒரு தொகுதிக்கு ரூ.906 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று அப்படி அரசு திவாலாகி இருந்தால், இதற்கு சாத்தியமில்லை. இதுவரை ரூ.1.12 லட்சம் கோடிக்கும் கூடுதலாக செலவு செய்யப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளின்படி, ஆட்சிக்கு வந்த … Read more

மகளிர் பிரீமியர் லீக் – கிரேஸ் ஹாரிஸ் அபாரம்…உ.பி. வாரியர்ஸை பந்தாடிய பெங்களூரு

மும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, உ.பி. வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மேக் லென்னிங் , ஹெர்லின் டியோல் களமிறங்கினர். … Read more

அமெரிக்காவில் 1 லட்சம் விசாக்கள் ரத்து; டிரம்ப் அதிரடி

வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 8 ஆயிரம் மாணவர் விசாக்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு அமெரிக்க போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர் விசாக்கள் உள்ளிட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. இதன்பின்னர் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு … Read more

நாளை மகரஜோதி: சபரிமலையில் குவிந்த பக்தர்கள் – பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரணங்கள்

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அன்றைய தினம் சாமி அய்யப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி, திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்படும். அவ்வாறு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த திருவாபரணங்கள் பந்தளம் ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி தலைமையில் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவாபரண ஊர்வலம் நேற்று பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா … Read more

ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம்; காதலியை கரம் பிடிக்கிறார்…!

அபுதாபி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான். இவருக்கும் ஆயிஷா முகர்ஜி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சொரவர் தவான் என்ற மகன் உள்ளார். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஷிகர் தவான் – ஆயிஷா முகர்ஜி தம்பதி விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து அயர்லாந்தை சேர்ந்த சோபியா ஷைன் என்ற பெண்ணுடன் ஷிகர் தவானுக்கு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, … Read more

"சிவப்பு கோட்டை தாண்டிய ஈரான்" – எலான் மஸ்க்கை வைத்து பெரிய பிளான் போடும் டிரம்ப்

ஈரான் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டதாகவும், அமெரிக்கா இதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ள நிலையில், ஏர்போர்ஸ் ஒன் (Airforce one) விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானில் உள்ளவர்கள் தலைவர்களா? அல்லது வன்முறை மூலம் ஆட்சி செய்கிறார்களா? என்பது தனக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார். ஈரான் நிலைமை குறித்து அமெரிக்க அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். ஈரானில் வன்முறையை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டுள்ள … Read more

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக இன்று (13-01-2026) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே காரைக்கால் பகுதிகளில் விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை … Read more

தேசிய சீனியர் கூடைப்பந்து இறுதிப் போட்டி: தமிழக அணியை வீழ்த்தி இந்தியன் ரெயில்வே ‘சாம்பியன்’

சென்னை, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 75-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டி நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணி, இந்தியன் ரெயில்வேயை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழக அணி முதல் கால்பகுதியில் 10-20 என்று பின்தங்கியது. அதில் இருந்து மீள தமிழக அணி கடுமையாக முயற்சித்த போதிலும் கடைசி வரை ரெயில்வேயின் ஸ்கோரை எட்ட முடியவில்லை. … Read more

இது பாண்டாவா? இல்லை மனிதனா?… ஜப்பான் பூங்காவில் நடந்த வித்தியாச சம்பவம்

டோக்கியோ, ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்றில் பாண்டாக்கள் இல்லாததால், பூங்கா பராமரிப்பாளர்கள் பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டி வருகின்றனர்! பூங்காவில் இருந்த 4 பாண்டாக்களும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதற்கு முன் வரிக்குதிரைக்கு பதிலாக கழுதைக்கு வண்ணம் பூசியது சீனாவில் பேசுபொருளானது. ஜப்பானில் உள்ள ஒரு பூங்காவில் பாண்டாக்கள் இல்லாத நிலையில், பூங்கா பராமரிப்பாளர்கள் பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகின்றனர். பூங்காவில் இருந்த நான்கு பாண்டாக்களும் சமீபத்தில் சீனாவுக்கு திருப்பி … Read more