மராட்டியம்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி

மும்பை, மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று மாலை கல்வான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 600 அடி பள்ளத்தாக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் … Read more

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய அணி அரையிறுதியில் தோல்வி

சென்னை, 14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய அரைஇறுதியில் 2-ம் நிலை அணியும், முன்னாள் சாம்பியனுமான இந்தியா, 7 முறை சாம்பியனான ஜெர்மனியுடன் மல்லுக்கட்டியது. பலம் வாய்ந்த ஜெர்மனி 2-வது நிமிடத்தில் கோல் திணிக்க முயற்சித்தது. அவர்களின் ஷாட்டை இந்திய கோல் கீப்பர் பிரின்ஸ் தீப் சிங் தடுத்தார். என்றாலும் ஜெர்மனியின் ஆக்ரோஷம், பந்தை … Read more

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு

தோஹா, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசாவில் 2 ஆண்டுகளாக நடந்து வந்த போர், சர்வதேச சமூகத்துக்கு பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாஸ்தீனர்கள் பலியானதுடன், உயிருடன் இருப்பவர்களுக்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினிச்சாவும் அதிகரித்தன. எனினும் நீண்ட இழுபறிக்குப்பிறகு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன. பின்னர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் … Read more

அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

இடாநகர், அருணாச்சல பிரதேசத்தின் ஷி யோமி பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2:38 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.48 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ … Read more

இந்த தொடரில் நான் விளையாடிய விதம்.. – தொடர் நாயகன் விராட் கோலி பேட்டி

விசாகப்பட்டினம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் … Read more

ஜெர்மனியில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

பெர்லின், உக்ரைன்-ரஷியா போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷிய டிரோன் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே ரஷியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ராணுவ பலத்தை பெருக்க அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை ராணுவ சேவையில் இணைக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த சேவை ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு தன்னார்வ அடிப்படையிலும் இருக்கும். போர் ஏற்படும் காலங்களில் இவர்கள் ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் … Read more

எதிர்காலத்தை கட்டமைத்த மோடி-புதின் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரியை விதித்தார். பின்னர் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் கிடைக்கும் அந்த நிதியை வைத்து தான் ரஷியா, உக்ரைன் நாட்டுடன் போரிடுகிறது என்றார். அதற்காக இந்தியாவிற்கு கூடுதலாக அபராத வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தார். ஆனால் இந்தியா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. எனவே டிரம்ப், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ரஷிய நிறுவனங்களுக்கு புதிய … Read more

டி20 கிரிக்கெட்: இதுவரை எந்த வீரரும் படைத்திராத சாதனையை படைத்த ரசல்

ஷார்ஜா, 6 அணிகள் இடையிலான சர்வதேச டி20 லீக் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெசர்ட் வைப்பர்ஸ் – அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அபுதாபி நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 53 ரன்களும், ரசல் 36 ரன்களும் அடித்தனர். இதனையடுத்து 172 ரன்கள் … Read more

இங்கிலாந்தில் கைதியுடன் தகாத உறவில் இருந்த பெண் அதிகாரிக்கு சிறை

லண்டன், இங்கிலாந்தின் வெதர்பி நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சுமார் 200 தண்டனை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் அதிகாரியாக இருந்தவர் மேகன் கிப்சன். இவர் சிறையில் இருந்த ஒரு கைதியுடன் தகாத உறவில் இருந்ததாக சக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட புகார்களை அனுப்பினர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த கைதிக்கு சிறையில் போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை லீட்ஸ் கிரவுன் … Read more

கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் 25 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

டெல்லி, கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜி அருகே அர்புரா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கடற்கரை பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். கேளிக்கை விடுதியில் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவா கேளிக்கை விடுதி தீ … Read more