ரஷ்யாவின் குலைநடுங்க வைக்கும் திட்டம்: கசிந்த ஆவணங்களால் ஸ்தம்பித்த உக்ரைன்

உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்க ரஷ்யா அதிர்ச்சி திட்டமொன்றை இனிவரும் நாட்களில் முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உக்ரைன் மாவட்டங்கள் சில இதுவரை சரணடைந்துள்ளன. குறித்த தகவல்கள் ரஷ்யாவால் உறுதி செய்யப்பட்டாலும், உக்ரைன் தரப்பில் ஏற்றுக்கொள்ளாமல் உள்ளனர். மட்டுமின்றி, உக்ரைன் மக்கள் தெருக்களில் இறங்கி, ரஷ்ய துருப்புகளை தடுத்து நிறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்கும் வகையில், ரஷ்ய துருப்புகளால் கைப்பற்றும் உக்ரைன் … Read more

ரஷ்யாவின் முக்கிய இராணுவ தளபதியை சுட்டுக்கொன்ற உக்ரைன்: புடினின் போர் திட்டத்திற்கு பேரிடி

உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின் முக்கிய இராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ள தகவல் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ள Major General Andrei Sukhovetsky, கீவ் நகருக்கு வெளியே சுமார் 30 மைல்களுக்கு தொலைவில் அமைந்துள்ள விமானத்தளத்தில் உக்ரைன் சிறப்புப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Major General Andrei Sukhovetsky படுகொலை செய்யப்பட்டது காரணமாகவே, கீவ் நகரை கைப்பற்றும் ரஷ்ய துருப்புகளின் நடவடிக்கைகள் பாதியில் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கீவ் நகருக்கு … Read more

22 ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு தடை விதிக்க மறுக்கும் பிரித்தானியா: போரிஸ் ஜோன்சன் மீது கடும் விமர்சனம்

ரஷ்ய கோடீஸ்வரர்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்க பிரித்தானியா தடுமாறி வரும் நிலையில், போரிஸ் ஜோன்சன் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது. இதுவரை 702 நபர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகள் விதித்துள்ளது. இதில் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களும், புடினுக்கு தொடர்புடைய 50 நிறுவனங்களும் உட்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் … Read more

ஒரு ஊருக்கு அனுப்பப்பட்ட 45 சவப்பெட்டிகள்… உக்ரைனில் இருந்து வெளிவரும் பகீர் தகவல்

உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வெளியானாலும், கடந்த 8 நாட்களில் 9,000 ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைன் தரப்பில் இருந்தே குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். மட்டுமின்றி, வெளியாகும் புகைப்படங்களும் குறித்த தகவலை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில், ரஷ்ய துருப்புகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களை துணிந்து எதிர்கொள்ளும் உக்ரைன் துருப்புகளை உண்மையான மண்ணின் மக்கள் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார். மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவதாக சூளுரைத்த ரஷ்யாவின் … Read more

கொடூர நாட்கள் காத்திருக்கிறது… மொத்தமாக முடிப்போம்: விளாடிமிர் புடின் ஆவேசம்

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவருவதாகவும், இன்னும் கொடூரமான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போர் 7வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பிலும் உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது. உக்ரேனிய அப்பாவி பொதுமக்கள் ஆயிரங்கள் ரஷ்யாவின் கண்மூடித்தனமான உக்கிர தாக்குதல்களுக்கு பலியாகியுள்ளனர். உக்ரைனில் ஒவ்வொரு மாவட்டமாக சிதைத்து ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. இது ஒரு போர் அல்ல எனவும், ரஷ்ய துருப்புகள் திட்டமிட்டே உக்ரைன் நகரங்களை … Read more

உக்ரைனை மீண்டும் விரைவில் கட்டமைப்போம்: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சபதம்!

ரஷ்யர்கள் உக்ரைனில் தாக்கி அளிக்கும் ஒவ்வொரு கட்டமைப்பிற்கும் இழப்பீடு வழங்க தயாராக இருங்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் கார்க்கிவ் போன்ற பல பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் அரசு கட்டிடங்கள் மற்றும் தேவாலயங்கள் என அனைத்தின் மீதும் ரஷ்யா தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யர்கள் தாக்கி அழித்துள்ள உக்ரைன் கட்டமைப்புகள் அனைத்தும் மீண்டும் புது பொலிவுடன் கட்டமைக்கப்படும் என சபதம் செய்துள்ளார். … Read more

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாதனில் 7 பேர் உயிரிழப்பு! உக்ரைனுக்கு இடையிலான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை.. உலக செய்திகள்

மாயமான போர் விமானத்தை தேட சென்ற மீட்பு ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வடகிழக்கு ருமேனியாவில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும். Source link

எல்லை மீறும் ரஷ்யா! உக்ரைனில் செய்தி ஒளிப்பரப்பின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வெளியான வீடியோ

உக்ரைனில் நேரலையில் ஒருவர் செய்தி வாசித்து கொண்டிருந்த போது கட்டடத்துக்கு பின்னால் குண்டு மழை பொழிந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நேட்டோ அமைப்பு உக்ரைன் நாடுடன் சேர்வதை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது. இந்த போர் சுமார் 8 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் … Read more

உக்ரைனில் இரவில் ரஷ்யா தாக்குதல் நடத்தவில்லை! உக்ரேனியர்களே பாலியல் தாக்குதல் நடத்தினர்… பிரபலம் அதிர்ச்சி தகவல்

உக்ரைன் மக்களுக்கு உக்ரேனியர்களும் அச்சுறுத்தலாக இருப்பதாக எழுத்தாளர் கொன்சலோ லிரா கூறியுள்ள நிலையில் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆட்சி கொடுமையானது என்றும் சாடியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 8 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் மக்களுக்கு உக்ரேனியர்களும் அச்சுறுத்தலாக இருப்பதாக எழுத்தாளர் கொன்சலோ லிரா கூறியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், உக்ரைனில் ரஷியா போர் தொடுத்த நிலையில் அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைனில் உள்ள குற்றவாளிகளை விடுதலை செய்து, அவர்கள் கைகளில் ஆயுதங்களை வழங்கியுள்ளார். குற்றவாளிகள் … Read more

போர் ரஷ்யாவுடனோ ரஷ்ய மக்களுடனோ அல்ல… புடினுடன் மட்டும்தான்: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வலியுறுத்தல்

உலகம் ரஷ்யாவுடனோ அல்லது ரஷ்ய மக்களுடனோ போர் செய்யவில்லை என்றும், போர், புடினுடன் மட்டும்தான் என்றும் கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான். உக்ரைனில் நடக்கும் போர் குறித்து தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய மேக்ரான், உக்ரைனில் நேட்டோ படைகள் இல்லை என்றும், ரஷ்யா தாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். உலகம் அறிந்த வண்ணமாக ரஷ்யாவிலும் பல்வேறு நாடுகளிலும் வாழும் ரஷ்யர்களே போரை எதிர்த்து பேரணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சரணடையும் ரஷ்ய வீரர்களை உக்ரைன் மக்கள் அன்புடன் வரவேற்று உணவளிப்பதைக் … Read more