மீண்டும் குறுக்கே வந்த மழை.. சிஎஸ்கேவிற்கு 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தம்

India oi-Mani Singh S அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டு இன்று நடைபெறும் நிலையில், இன்றும் மழை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. சென்னை அணி இரண்டாவதாக பேட்டிங் செய்ய தொடங்கிய முதல் ஓவரிலேயே மழை பெய்ததால் போட்டி நிறுத்தபப்ட்டுள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டனஸ் அணியும் … Read more

மின்னல் வேக ஸ்டம்பிங்.. தீபக் சஹார் விட்டதை தட்டி தூக்கிய தோனி.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி

India oi-Mani Singh S அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங்கிற்கு தூண் போல இருக்கும் சுப்மான் கில்-லை இரண்டாவது ஓவரில் அவுட் ஆக்க கிடைத்த அருமையான சான்சை தீபக் சஹார் தவறவிட்டார். ஆனால் ஜடேஜா வீசிய ஓவரில் சுப்மன் கில்லை மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் தோனி வீழ்த்தினார். 16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் – சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு … Read more

விழுந்த ரிஷிகள் சிலை, மூடப்பட்ட உஜ்ஜைன் கோயில் வளாகம்! கட்டுமானத்தில் பாஜக அரசு ஊழல் என காங். புகார்

India oi-Vigneshkumar இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் மஹாகாலேஷ்வர் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்ட ஏழு ரிஷிகளின் சிலைகள் பலத்த காற்றினால் கீழே விழுந்து தேமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலைச் சுற்றி மகாகல் லோக் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பிரதமர் மோடி கடந்தாண்டு திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக அங்கே ஏழு சப்தரிஷிகளின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் அதைப் பார்த்துச் செல்கிறார்கள். … Read more

சூப்பர்! 24 ஆண்டுகளில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் செய்த சாதனைகளை பாருங்க.. கொண்டாடும் கட்சியினர்

India oi-Halley Karthik புவனேஸ்வர்: இன்று ஒடிசா அரசியலுக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் முக்கியமான நாளாகும். தேசத்தின் மிகவும் பிரபலமான வெகுஜனத் தலைவரான நவீன் பட்நாயக் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 5வது முறையாக இதே நாளில் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதால் தற்போது 5வது முறை ஆட்சியின் 4வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இவரது ஆட்சி காலத்தில் மாநிலம் வளர்ச்சியடைந்து … Read more

பாலியல் புகாருக்கான ஆதாரங்களை கொடுக்கவில்லை..மல்யுத்த வீரர்களின் போராட்டம் பற்றி அண்ணாமலை கருத்து

Tamilnadu oi-Halley Karthik சென்னை: ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் பாஜக எம்பிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்கள் எந்தவித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றியுள்ளார். ஆனால் இவரால் 10க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக உலக சாம்பின்ஷிப் பதக்கம் … Read more

\"பாய்சன்?\" புதின் மீட்டிங்கிற்கு பின் திடீரென சரிந்த பெலாரஸ் அதிபர்.. ரஷ்யாவில் என்ன நடக்கிறது

International oi-Vigneshkumar மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த சில நிமிடங்களில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போருக்குப் பின்னர் உலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு மோசமாகவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இதுவரை இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால் உலக நாடுகளிடம் இருந்து ரஷ்யா தனித்து வைக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டது. சில நாடுகள் நடுநிலை நிலைப்பாட்டை … Read more

துருக்கி அதிபர் தேர்தல்.. மீண்டும் வென்ற ரெசெப் தயிப் எர்டோகன்.! ஏமாற்றத்தில் உலக நாடுகள்

International oi-Vigneshkumar துருக்கி: மத்திய கிழக்கு நாடான துருக்கியில் புதிய அதிபரைத் தேர்வு செய்யச் சமீபத்தில் தேர்தல் நடைபெற்று. இதில் ரெசெப் தயிப் எர்டோகன் 52.1% வாக்குகளைப் பெற்று வென்றார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாகத் துருக்கி உள்ளது. அந்நாட்டின் அதிபராக ரெசெப் தயிப் எர்டோகன் என்பவர் இருந்து வருகிறார். இதற்கிடையே அந்நாட்டின் அதிபரைத் தேர்வு செய்யத் துருக்கியில் தேர்தல் நடைபெற்றது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் துருக்கி நாட்டின் அதிபராக ரெசெப் தயிப் எர்டோகன் என்பவரே … Read more

ஜப்பானை திரும்பி பார்க்க வைத்த ஸ்டாலின்.. இந்தியா – ஜப்பான் உச்சி மாநாடு! தமிழ்நாட்டில் நடத்த அழைப்பு

International oi-Noorul Ahamed Jahaber Ali டோக்கியோ: இந்தியா – ஜப்பான் நாடுகளிடையிலான உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு உலக முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். மே 23 ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர், தனது … Read more

வேலூர் அருகே சோகம்.. ஆம்புலன்ஸ் டிரைவர் இறக்கிவிட்டதால் குழந்தையின் உடலை சுமந்து சென்ற பெற்றோர்

Tamilnadu oi-Vishnupriya R வேலூர்: வேலூர் அருகே சாலை இல்லை என ஆம்புலன்ஸ் டிரைவர் இறக்கிவிட்டதால் குழந்தையின் சடலத்தை 10 கி.மீ. தூரம் வரை பெற்றோர் தூக்கிச் சென்ற சோக சம்பவம் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் அல்லேரி மலை கிராமத்திற்குட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி விஜி. இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் … Read more

1.73 சீட்டுகளுக்கு 2.48 பேர் விண்ணப்பம்.. அரசு கலை, அறிவியல் கல்லூரி கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முதல் நாளான இன்று நடைபெறுகிறது. கடந்த மே 8 ஆம் தேதி தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் 164 அரசு கலை மற்றும் … Read more