தமிழ்நாட்டில் மேலும், 25மாவட்ட மருத்துவமனைகள், 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் திறப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில்  உள்ள 19 மாவட்டங்களில் விரைவில் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்,  25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில், மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டிற்கான மருத்துவ பயிலரங்கத்தினை தொடங்கி வைத்து, மயக்கவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறியதாவது, மக்கள் நல்வாழ்வுத்துறையில் தொடர்ந்து மகப்பேறு காலங்களில் தாய்மார்கள் மரணங்களை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

சென்னை: தமிழ்நாட்டில்  டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார்  2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை … Read more

டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை! இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில்,  திரைப்பட தயாரிப்பாளர்  ஆகாஷ் பாஸ்கர்,  தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை என்பது குறித்து  இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தில்,   “எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது?  என்பது குறித்தும்,  விக்ரமின் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு ED-க்கு என்ன அதிகாரம் இருக்கிறது … Read more

மருத்துவக் கழிவு கொட்டினால் ‘குண்டாஸ்’! தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…

சென்னை: மருத்துவக் கழிவு கொட்டுபவர் மீது குண்டாஸ் போடும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்முலம், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவு கொட்டினால்  அவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும். தமிழ்நாடு சட்டப்பேரவையில்  கடந்த ஏப்ரல் மே மாதங்களில்  நடைபெற்ற  பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். முன்னதாக, தமிழ்நாடு பட்ஜெட் கூட்டர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,  ஏப்ரல் 26,  … Read more

அன்புமணிக்கு தலைவர் பதவி தர மறுக்கும் ரா,மதாஸ்

தைலாபுரம் தமது உயிருள்ளவரைஅன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம், ”2026 தேர்தலுக்கு பிறகு பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அவர்களை கொண்டாட வேண்டும். தந்தை, … Read more

பெண்களை இழிவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு! காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, சென்னை  காவல்துறை அணையர்  பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொன்முடி குடும்பத்தினர் மற்றும் அவர் தெய்வமாக மதிக்கும் முதல்வர் குடும்பத்திலும் அப்படித்தானா என … Read more

யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவருக்கு பாமக கண்டனம்

சென்னை பாமக பொருளாளர் திலகபாமா யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவர் அந்தோணிப்பிள்ளைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இன்று பாமக பொருளாளர், கவிஞர் திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் , “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றார் ஒளவையார். ஆனால் எம் மீனவர்களோ கடல் எல்லையைத் தாண்டி அல்ல, தங்களுக்கு உண்டான எல்லைக்குள் தான் தனக்கும், தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கும் ஒருவேளை உணவிற்கான ஆதாரத்தை தேடுகின்றனர். நிலத்திலேயே எல்லைகளை வரையறுக்க இயலாத போது, பரந்து விரிந்து கிடக்கும் கடலில் எல்லையைக் கண்டறிவது … Read more

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பெண் செவிலியர் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட கேரள அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்ட அந்த விமானம் கீழே விழுந்த மறுநொடி தீப்பிடித்து குபுகுபுவென எரிந்ததில் 241 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில், விபத்துகள் தவிர்க்க முடியாதவை என்றும் உயிரிழப்பு துரதிஷ்டவசமானது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இந்நிலையில், இந்த விமானத்தில் … Read more

அகமதாபாத் விமான விபத்தில் புல் பூண்டு கூட தீக்கிரையான நிலையில் கீதை மட்டும் சேதாரமின்றி தப்பியது…

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 265 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 6 பேர் முகங்கள் மட்டுமே அடையாளம் காணும் வகையில் இருந்தது. ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்ததில் அதன் அருகில் இருந்த மரம் செடி கொடி பறவைகள் என பல்வேறு உயிரினங்கள் மட்டுமன்றி இரும்புக் கம்பிகளும் அந்த தீயில் உருகியது. இருப்பினும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர்பிழைத்த நிலையில் தற்போது பகவத் கீதை புத்தகம் ஒன்று … Read more

எழும்பூரில் 6 விரைவு ரயில்கள் சேவை மாற்றம்

சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாக6 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெற்கு ரயில்வே, தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நடைமேம்பாலம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், எழும்பூர் – புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வந்தடையும் என்றும், புதுடெல்லி – எழும்பூர் இடையே இயக்கப்பட்ட … Read more