பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ! புகைப்படம் வெளியீடு…

ஸ்ரீநகர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 28 பேரை சுற்றுக்கொன்றவர்களில் ஒருவரான பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும்,  ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் ஏராளமானோர் குழுமியிருந்து இயற்கையை ரசித்து வந்த நேரத்தில், அங்கு இந்திய ராணுவ உடையுடன் வந்த பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் கடந்த (ஏப்ரல்) 22-ம் தேதி சுற்றுலா பயணிகள், குறிப்பாக இந்து பயணிகளை சுட்டுக் கொன்றனர்.  இந்த நிகழ்வில் … Read more

கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா

மதுரை:  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக  தொடங்கியது. இந்த விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு சொக்கநாதர் மீனாட்சி அருள்பெற்றனர். உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி   மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.  இன்று காலை சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடன் எழுந்தருளினார். பூஜைகளுக்கு பின்னர் மங்கள … Read more

துணைவேந்தர் பதவி நியமனம் மற்றும் நீக்கம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரலவையில்,  துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா தாக்கல் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை.க்கு துணைவேந்தர் நியமனம் மற்றும்  துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. இன்றைய அமர்வில்,  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் … Read more

இன்றுடன் நிறைவடைகிறது சட்டப் பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடர்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாள் அமர்வான இன்று  பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப் பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி அன்று தொடங்கியது. அன்றைய தினம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,  2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை காலை  9.30 மணியளவில் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் இடம்பெற்றன. இதையடுத்து மார்ச் … Read more

இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது/ இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ”குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மே 5ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் … Read more

16 யூ-டியூப் சேனல்களுக்கு தடை… பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்தியா…

ஷோயப் அக்தரின் சேனல் உட்பட 16 பாகிஸ்தான் யூ-டியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, தேசவிரோத மற்றும் போலி செய்திகளைப் பரப்பியதற்காக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் மீது மத்திய அரசு இன்று (திங்கட்கிழமை) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. டான் நியூஸ், சாமா நியூஸ், ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், சுனோ நியூஸ், ஜியோ நியோ உள்ளிட்ட இந்த அனைத்து சேனல்களுக்கும் மொத்தம் சுமார் 6.3 … Read more

பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து வெளியேறிய 1200 வீரர்கள்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து 1200 வீரர்கள் வெளியேறி உள்ளனர். கடந்த 22-ந் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டி பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பாகிஸ்தான் உடனான சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட … Read more

53 நாடுகளைச் சேர்ந்த 402 மலையேறுபவர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி

8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள சுற்றுலாத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முறை, 53 நாடுகளைச் சேர்ந்த 74 பெண்கள் உட்பட 402 மலையேறுபவர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 75 பெண்கள் மற்றும் 330 ஆண்கள் உட்பட 414 பேர் சிகரத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நேபாளத்தில் பல்வேறு சிகரங்களை ஏற வழங்கப்பட்ட அனுமதிகளிலிருந்து மொத்தம் ₹68.4 கோடி பர்மிட் … Read more

இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதலை தொடங்கும்.. பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் : பாக். அமைச்சர்

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் நடக்கக்கூடியவகையில் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ரெசிஸ்டெண்ட் ப்ரண்ட், பாகிஸ்தான் வழியாக தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பால் ஆதரிக்கப்படுவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது, மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் தயார்நிலை குறித்துப் பேசிய அமைச்சர் … Read more

பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்… பஹல்காம் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணைக்கு சீனா அழைப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து “விரைவான மற்றும் நியாயமான விசாரணை” உட்பட, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலையை “குளிர்விக்க” அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாக சீனா திங்களன்று கூறியது. மேலும் அனைத்து காலங்களிலும் தனது நட்பு நாடான பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கு சீனா ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. “தற்போதைய சூழ்நிலையைத் தணிக்க உதவும் அனைத்து நடவடிக்கைகளையும் சீனா வரவேற்கிறது மற்றும் ஆரம்பத்திலேயே நேர்மையான மற்றும் நியாயமான விசாரணைகளை ஆதரிக்கிறது” என்று சீன வெளியுறவு அமைச்சக … Read more