`அ.இ.பு.த.ம.மு.க’: தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, புதிதாக கட்சியை தொடங்குவதாக அறிவித்து, கொடியை மட்டும் முதலில் அறிமுகப்படுத்திய நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்து உள்ளார். அதன்படி கட்சியின்  அ.இ.பு.த.ம.மு.க’ . அதாவது அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம். கட்சியின் சின்னமாக தென்னந்தோப்பு என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, இன்று போயஸ்கார்டனில் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் தொடங்கிய புதிய  கட்சியின் பெயரையும் … Read more

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனு

சென்னை: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புகாவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாத்திகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன்  அமர்வு, மனு தொடர்பாக லஞ்ச … Read more

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: எரிபொருள் தட்டுப்பாடு: அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என பொது மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு ஆசிய போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கவலை எழுந்துள்ள நிலையில், “போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனால்,  பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: மார்ச்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15-ந்தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15ந்தேததி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் . இந்த கூட்டத்தில்  வரவிருக்கும்  சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் … Read more

சட்டம் ஒழுங்கு? 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கொடூர கொலை! எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தலை துண்டித்தும், உடல்கள் துண்டு துண்டாக கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். திமுக அரசின் கீழ், சட்டம், ஒழுங்கு எவ்வளவு செயலிழந்து போய் விட்டது என்பதை, வேதனையுடன் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது இதுபோன்ற சம்பவங்கள் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். … Read more

திமுக ஆட்சியில் 2 டைடல் பூங்கா மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் உருவானது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திமுக ஆட்சியில் 2 டைடல் பூங்கா மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் உருவானது! எ மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்,  வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும் – அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம் என்றும் மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”திராவிட மாடல் ஆட்சியில் 2 டைடல் பூங்கா மற்றும் 16 … Read more

நெல்லையில் பயங்கரம்: 16 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிய 11ம் வகுப்பு மாணவன் – பரபரப்பு

நெல்லை: நெல்லை அருகே 16 வயது சிறுவனை11ம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னாா்கோவிலில் சிறுவா்களிடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் 1 மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.  வாய்தகராறில் நண்பனான சிறுவனை அரிவாளால் வெட்டிய மாணவரால் அதிர்ச்சி படுகாயமடைந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி. அரிவாளால் வெட்டிய மாணவனை … Read more

தமிழக பொறுப்பு ஆளுநராக  பதவியேற்றார்   அர்லேகர் – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநராக   நியமிக்கப்பட்டுள்ள அர்லேகர் இன்று மதியம் பதவியேற்றார் . அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழாவில்  முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து கேரள ஆளுநராக உள்ள அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று தமிழகத்தில் உள்ள மக்கள் மாளிகையில் (ராஜ்பவன்) பொறுப்பேற்றார். அவருக்கு தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து … Read more

சென்னை போரூர் நான்கு முனை சந்திப்பில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை போரூர் நான்கு முனை சந்திப்பில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. போரூர் நான்கு முனை சந்திப்பில், 12 மார்ச் 2026 அன்று, முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வெண்கலச் சிலைகள் திறக்கப்பட்டன. இந்த வரலாற்று சிறப்புமிக்க சிலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், சேகர்பாபு மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சிலை திறப்பு விழாவையொட்டி, … Read more

30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் ஹோர்முஸ் வழியாக 2 டேங்கர்கள் இந்தியாவுக்கு ரகசிய பயணம் ?

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா நோக்கி வந்த இரண்டு எண்ணெய் டேங்கர்கள் தங்களின் டிராக்கிங் கருவிகளை அணைத்தபடி அந்த நீரிணையை கடந்து சென்றதாக Moneycontrol செய்தி வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, மார்ச் 5 முதல் 10 வரை மொத்தம் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு டேங்கர்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி பயணித்துள்ளன. இந்த இரண்டு … Read more