பேரரசா் பெரும் பிடுகு முத்தரையருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்! தமிழ்நாடு அரசு கோரிக்கை

சென்னை: பேரரசா் பெரும் பிடுகு முத்தரையருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்  என  தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகள் மாநில முதல்வரால் வைக்கப்படும் நிலையில், இந்த கோரிக்கை தமிழக அமைச்சரால் விடுக்கப்பட்டுள்ளது.  பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் நினைவாக அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், … Read more

202 தொகுதிகளில் வெற்றி: பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது என்டிஏ கூட்டணி!

பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது.  வரலாறு காணாத அளவில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியான மகாபந்தன் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ந்தேதி நடைபெற்றது. இதில்   பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி … Read more

பீகார் வாக்கு எண்ணிக்கை 12மணி நிலவரப்படி, என்டிஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை

பாட்னா:  பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  மதியம்  12மணி நிலவரப்படி,  பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் என்.டி.ஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமகா என்டிஏ கூட்டணி ஆட்சி தக்க வைக்கும் என  நம்பப்படுகிறது. மகாகத்பந்தன் 46 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.  காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. இது ராகுல்காந்திக்கு … Read more

புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம், பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம் மற்றும்  , பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார் . சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.24 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை திறந்து தார். தொடர்ந்து பெரியமேட்டில்,  ரூ. 3.86 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் … Read more

நேரு பிறந்தநாள்: டெல்லி நினைவிடத்தில் சோனியா காந்தி, கார்கே மலர்தூவி மரியாதை

டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்  காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி மலர்தூவி மரியாதை  செய்தார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செய்தார். இந்தியாவின் முதல் பிரதமர்  மறைந்த ஜவகர்லால் நேருவின் 136வரது  பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில்  டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  , … Read more

சந்திரனின் ஈர்ப்புப் பாதையில் சந்திரயான்-3: இஸ்ரோ

சந்திரயான்-3, 2023 சூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2023 ஆகஸ்ட் 5 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பின்னர் ஆகஸ்ட் 23ம் தேதி, விக்ரம் லேண்டர் உதவியுடன் பிரக்யான் உலவி சந்திரனில் தரையிறங்கியது. இதன் மூலம் சந்திரனில் தரையிறங்கிய நான்காவது நாடு என்றும் நிலவின் தென்முனையில் தரையிறங்கிய முதலாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இதில் பிரக்யான் உலவி செயலிழந்த நிலையில் இந்த விண்கலத்தின் உந்துவிசை … Read more

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்! அன்புமணி

சென்னை: தமிழ்நாடு மின்சாரியத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்யப்பட்டதில்  நடைபெற்ற  முறைகேடு தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ள பாமக தலைவர்   அன்புமணி,  மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனை என்றும் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு அரசு மின்வாரியத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட டிரான்ஸ்பார்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே குற்றம் சாட்டியது. இதுதொடர்பான டென்டரில போட்டியிட்ட அனைவரும் ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைக்கப்படுகிறார்கள். ஒரே விலைக்கு டெண்டர் கொடுத்தவர்களிடம் கூடி … Read more

தமிழ்நாட்டில் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை:  “தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றியபோது,  தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்றவர்,   SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது, அதனால் அவர்களுக்கு திமுகவினர் உதவ … Read more

பாகல்கோட் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கரும்பு லாரிகளுக்கு தீ வைப்பு… இழப்பீடு வழங்க விவசாய சங்கம் வலியுறுத்தல்…

கரும்பு கொள்முதல் விலையை ரூ. 3500ஆக உயர்த்த வேண்டும் என்று கர்நாடக கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சர்க்கரை ஆலைகள் இதற்கு இணங்க மறுத்ததை அடுத்து டன்னுக்கு ரூ. 50 உயர்த்தி ரூ. 3300ஆக வழங்க மாநில அரசு முன் வந்தது. ஆனால் கரும்பிலிருந்து எடுக்கக்கூடிய சர்க்கரையின் அளவு விகிதத்தை 10.25% வீதத்தில் இருந்து 11.25% வீதமாக உயர்த்தியதால் மொத்தத்தில் கரும்பு விவசாயிகளுக்கு தற்போதுள்ள விலையும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் கரும்புடன் வந்த 200க்கும் மேற்பட்ட … Read more

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

கோயமுத்தூர்: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று  மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 முறை இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று 8வது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்! காவல்ஆணையர் அருண் கூறியிருந்தார். இந்த நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று 8வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று  காலை 11 … Read more