தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கு… ஏப். 9 ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்…

தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கு வரும் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது, இந்த கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க இருக்கிறார். இந்திய தொழில் துறை கூட்டமைப்பு நடத்தும் தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு சிறந்த ஐகான் விருது வழங்கப்பட இருக்கிறது. “தக்ஷின்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கருத்தரங்கு சென்னை வர்த்தக மைய்யத்தில் ஏப்ரல் 9 மற்றும் … Read more

ஃபெட்எக்ஸ் கொரியர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இந்தியர் ராஜ்சுப்ரமணியம் நியமனம்…

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபெட்எக்ஸ் கொரியர் (FedEx) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களின் உயர்அதிகாரிகளாக இந்தியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கூகுள், மைக்ரோ சாப்ட், டிவிட்டர் உள்பட பல நிறுவனங்களில் தலைமை அதிகாரியாக இந்தியர்களும், இந்திய வம்சாவழியினரும் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது,  உலகளவில் கொரியர் வர்த்தகத்தில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான  அமெரிக்காவின் ஃபெட்எக்ஸ்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் … Read more

பாஜகவின் ஜனநாயகத்தின்மீதான தாக்குதலுக்கு எதிராக ஒன்றுசேர்வோம்! எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மம்தா கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று பாஜக அல்லாத முதல்வர்கள், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும்  கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜனநாயகத்தின் மீதான பாஜகவின் நேரடி தாக்குதல்கள் குறித்து கவலையை வெளிப்படுத்தி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என் அனைத்து எதிர்க்கட்சி  தலைவர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். … Read more

தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  29/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 25,105 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,55,37,882 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,52,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 64 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,14,387 பேர் குணம் அடைந்து வீடு … Read more

சென்னையின் அடையாளம் ‘சென்ட்ரல் ஸ்கொயர்’! முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்…

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள ‘சென்ட்ரல் ஸ்கொயர்’ (சென்ட்ரல் மதத்திய சதுக்கம்) நாளை முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்ட்ரல் ரயில் நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையம் ஒருங்கிணைத்து ரூ.400 கோடி ரூபாய் மதிப்பில் அழகிய செடிகளுடன்  வாகன நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் வகை யில் பிரமாண்டமான  சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள “டைம்ஸ் ஸ்கொயர்”, … Read more

அதிகாரியை சாதி பெயர் கூறிய விவகாரம்: போக்குவரத்து துறை அமைச்சர் இலாகா மாற்றம்…

சென்னை: போக்குவரத்து அமைச்சராக இருந்து வந்த ராஜகண்ணப்பன் மீது கூறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அவர்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். போக்குவரத்துதுறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு (மார்ச் 14ந்தேதி) எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் … Read more

ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு! டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்றும், நாளை முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம் என இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC)  நடத்தும் குரூப்-4 தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, இன்று மாலை    டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அதைத் … Read more

மதுரை காமராஜர் பல்கலைக் கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் குமார் நியமனம்!

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குமார்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமன ஆணையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட எம்.கிருஷ்ணன் கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து மதுரை துணைவேந்த பணியிடம் காலியாக இருந்து வந்தது. தொடர்ந்து,  புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தலைமையில் தேடல் … Read more

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிப்பு! கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31ந்தேதி மற்றும் ஏப்ரல் 2ந்தேதி முதல் 4ந்தேதி வரை போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர்  கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். எட்டு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உற்பத்தி முடக்கம் என மக்கள் மீது பலமுனை தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் தவிக்கிறார்கள். பெட்ரோலியப் … Read more

கொரோனா பாதிப்பு: இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு…

டெல்லி: இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவரது இந்திய பயணம் ஒத்தி வைக்கப் படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் இன்னும் தொற்று பரவல் நீடித்து வருகிறது. இதற்கிடையே உலக நாடுகளுக்கு இடையே போக்குவரத்து உள்பட அனைத்துவிதமான பரிவர்த்தனை களும் மீண்டும் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், இந்தியாவுக்கு 3 … Read more