கோகுல்ராஜ் ஆணவக்கொலை: தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…

சேலம்: கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை  செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு என்ன தண்டனை என்பது குறித்து நீதிபதி இன்று அறிவித்துஉள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி கடந்த 5ந்தேதி பரபரப்பு தீர்ப்பு … Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறப்பித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த மாதம் (பிப்ரவரி)  11ந்தேதி  ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள்,  இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்,  அவர்கள் விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி … Read more

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றமும் மறுப்பு…

சென்னை: தனது பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சில்மிஷ டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதி மன்றமும் மறுத்து விட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் பள்ளி மாணவி களிடம் பாலியல் சில்மிஷம் செய்தாக கொடுத்த புகாரின் போரில்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் … Read more

உக்ரைன் மாணவர்கள் கல்வியைத் தொடர விரைவில் நல்ல முடிவு : முதல்வர் உறுதி

திருநெல்வேலி கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு வந்துள்ள உக்ரைன் மாணவர்கள் கலவியைத் தொடர விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்கள் கல்வியைப் பாதியில் நிறுத்தி விட்டு இந்தியாவுக்குத் திரும்புகின்றனர்.  இவர்களில் பெரும்பாலோனோர் மருத்துவ கல்வி மாணவர்கள் ஆவார்கள்.  இவர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை  எடுத்து வருகின்றன. தற்போது தமிழகத்தின் தென்பகுதியில் சுற்றுப்பயணம் … Read more

அடுத்த வருடம் கேளம்பாக்கம் – விமான நிலையம் மெட்ரோ ரயில் பணிகள் தொடக்கம்

சென்னை அடுத்த வருடம் கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அறிமுகம் செய்யப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்போத் மக்களுக்கு மிகவும் பயன் அளித்து வருகிறது.   இந்த மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விரைவில் சென்னை நகர் முழுவதுமே மெட்ரோ ரயில் சேவை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  கேளம்பாக்கம் மற்றும் சென்னை மிமான … Read more

ரூ.8 கோடி செலவில் சென்னை நகர சாலைகளில் புதிய பெயர்ப் பலகைகள்

சென்னை விரைவில் சாலைகளில் புதிய பெயர் பலகைகள் வார்டு எண், மண்டல எண் மற்றும் பிரிவு விவரங்களுடன் ரூ.8 கோடி செலவில் சென்னை மாநகராட்சி அமைக்க உள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை மாநகராட்சி ஒரு சில பகுதிகளில் சாலைகளில் புதிய பெயர் பலகைகளைச் சோதனை ரீதியாக அமைத்தது.  அதில் சாலைகளின் பெயர்களுடன் அந்த வார்டு எண், மண்டல எண், பிரிவு ஆகிய விவரங்கள் இருந்தன.  மேலும் அந்த பகுதியில் உள்ள முக்கிய தலங்களின் படங்களும் … Read more

கேமிங் நிறுவனங்களாலும் புறக்கணிக்கப்பட்ட ரஷ்யா

மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுத்ததால் ரஷ்யாவில் புகழ்பெற்ற கேமிங் நிறுவனங்கள் தங்கள் விற்பனையை நிறுத்தி உள்ளன. ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதையொட்டி உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு சில சில நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.ஒரு சில நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது நிறுவன செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. தற்போது அந்த வரிசையில் சில சில கேமிங் நிறுவனங்கள் இணைந்துள்ளன,  ரஷ்யாவில் எபிக் கேம்ஸ், ஆக்டிவிஷன் Blizzard, CD Projekt … Read more

பிக்பாஸில் அசத்தும் பிந்து !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபல நடிகையாக திகழும் பிந்து மாதவி, தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானவர் இவர், தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 என வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ்பெற்றார். பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது. இதனை தொடர்ந்து தற்போது தமிழைப்போல … Read more

தமிழகத்தில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  07/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 43,382 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,47,54,613 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 34,51,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,017 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 512 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,10,740 பேர் குணம் அடைந்து வீடு … Read more

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன எனத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே பல்வேறு துறைகளிலும் பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.   இவை அனைத்தும் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி நடந்து வருகிறது. அவ்வகையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  உத்தரவுப்படி மக்களிடையே விளையாட்டு திறனை மேம்படுத்த 234 தொகுதிகளிலும் … Read more