பெண்களை இழிவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு! காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, சென்னை  காவல்துறை அணையர்  பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொன்முடி குடும்பத்தினர் மற்றும் அவர் தெய்வமாக மதிக்கும் முதல்வர் குடும்பத்திலும் அப்படித்தானா என … Read more

யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவருக்கு பாமக கண்டனம்

சென்னை பாமக பொருளாளர் திலகபாமா யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவர் அந்தோணிப்பிள்ளைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இன்று பாமக பொருளாளர், கவிஞர் திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் , “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றார் ஒளவையார். ஆனால் எம் மீனவர்களோ கடல் எல்லையைத் தாண்டி அல்ல, தங்களுக்கு உண்டான எல்லைக்குள் தான் தனக்கும், தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கும் ஒருவேளை உணவிற்கான ஆதாரத்தை தேடுகின்றனர். நிலத்திலேயே எல்லைகளை வரையறுக்க இயலாத போது, பரந்து விரிந்து கிடக்கும் கடலில் எல்லையைக் கண்டறிவது … Read more

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பெண் செவிலியர் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட கேரள அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்ட அந்த விமானம் கீழே விழுந்த மறுநொடி தீப்பிடித்து குபுகுபுவென எரிந்ததில் 241 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில், விபத்துகள் தவிர்க்க முடியாதவை என்றும் உயிரிழப்பு துரதிஷ்டவசமானது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இந்நிலையில், இந்த விமானத்தில் … Read more

அகமதாபாத் விமான விபத்தில் புல் பூண்டு கூட தீக்கிரையான நிலையில் கீதை மட்டும் சேதாரமின்றி தப்பியது…

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 265 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 6 பேர் முகங்கள் மட்டுமே அடையாளம் காணும் வகையில் இருந்தது. ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்ததில் அதன் அருகில் இருந்த மரம் செடி கொடி பறவைகள் என பல்வேறு உயிரினங்கள் மட்டுமன்றி இரும்புக் கம்பிகளும் அந்த தீயில் உருகியது. இருப்பினும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர்பிழைத்த நிலையில் தற்போது பகவத் கீதை புத்தகம் ஒன்று … Read more

எழும்பூரில் 6 விரைவு ரயில்கள் சேவை மாற்றம்

சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாக6 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெற்கு ரயில்வே, தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நடைமேம்பாலம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், எழும்பூர் – புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வந்தடையும் என்றும், புதுடெல்லி – எழும்பூர் இடையே இயக்கப்பட்ட … Read more

குழந்தைகளை பணிக்கு அனுப்பினாலும் பணி அளித்தாலும் 2ஆண்டு சிறை

விருதுநகர் தமிழ்க அரசு குழந்தைகளை பணிக்கு அனு[ப்பும் பெற்றோருக்கும் பணி அளிப்போருக்கும் 2 ஆண்டு சிறைதண்டனை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது இன்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேல்டு விசன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். … Read more

மேட்டூரை தொடர்ந்து கல்லணை: ஜூன் 15ந்தேதி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி திருச்சி அருகே உள்ள கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் கடந்த 12ந்தேதி மேட்டூர்அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட நிலையில், அடுத்ததாக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். ஜூன் 12 ஆம் தேதி  மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், காவிரி ஆறு வழிகாக கல்லணை நோக்கி வந்துகொண்டிருக்கறிது. இது வரும் 15ந்தேதிக் குள்  மாயனூர் கதவணை, … Read more

தாய்லாந்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

தாய்லாந்தில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர், மேலும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “முதற்கட்ட விசாரணையில் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு எதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை” என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. விமானம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் … Read more

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிப்பு…

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில்,  வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு, திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் மொத்தம்  6 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்ததால், அவர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி, திமுக தரப்பில்,  வில்சன், சிவலிங்கம், சல்மா, கமல்ஹாசன் மற்றும் அதிமுக தரப்பில்,   இன்பதுரை, தனபால் … Read more

போக்குவரத்து நெரிசலால் 10 நிமட தாமதம் : விமான விபத்தில் இருந்து தப்பிய பெண்

அகமதாபாத் நேற்று போக்குவரத்து நெரிசலால் 10 நிமிட தாமதம் ஏற்பட்டதால் விமான விபத்தில் இருந்து ஒரு பெண் தப்பியுள்ளார் நேற்று நடந்த அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் விமானத்தில் பூமி சவுகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக அவர் வாகனத்தில் தனது வீட்டில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் … Read more