மதுரை ஆதீனத்தின் மீது அரசியல் நோக்கத்துடன் காவல்துறை வழக்குப்பதிவு! உயர்நீதிமன்றம் விமர்சனம்…

சென்னை; மதுரை ஆதீனத்தின் மீது அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது”  என சென்னை  உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஆட்சியை குறை குற்றம் சொல்லும் எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்வதுடன், அவர்களை நள்ளிரவே சென்று காவல்துறையினர் மூலம்அதிரடியாக கைது செய்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. அதுபோல அரசின் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சிலர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் … Read more

கூவத்தூரில் நடந்தது என்ன? போட்டுடைத்த டிடிவி தினகரன்…

சென்னை: கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? என்று கூறிய டிடிவி தினகரன், அங்கு நடந்த சம்பவத்தை செய்தியாளர்களிடையே தெரிவித்தார். எடப்பாடி சொல்வது பொய் என்று கூறியதுடன், அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுகவின் 112 எம்எல்ஏக்கள்தான் என்றார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.  ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அதை … Read more

நாளை தி.மு.க சார்பில் கரூரில் முப்பெரும் விழா; மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம்

திருச்சி: திமுக முப்பெரும் விழா நாளை கரூரில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து கரூர் செல்கிறார். திமுக தொடங்கப்பட்ட தினம், அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் ஈ.வே.ரா பிறந்தநாள் விழா என திமுக சார்பில் முப்பெரும் விழா கரூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னையிலிருந்து … Read more

தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு – 22 பேர் பலி!

சென்னை: தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு – 22 பேர் பலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய்களால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தெருநாய்கள் வளர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், அதை அதிகாரிகள் செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் தெருநாய்களின் கடித்து ஆளாகி வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதார ஆய்வு நிறுவனம்,   WHO 2030ம் ஆண்டுக்குள் ரேபிஸ் உயிரிழப்பு … Read more

இந்தூர் விபத்து: குடிபோதையில் இருந்த ஓட்டுநர் லாரியை கூட்டத்தினர் மீது மோதியதில் 3 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கலானி நகரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மக்கள் மீது மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் காவல் துணை ஆணையர் கிருஷ்ணா லால்சந்தானி தெரிவித்தார். ‘இந்தச் சம்பவம் திங்கள்கிழமை இரவு நடந்தது. குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் ராமச்சந்திரா நகர் அருகே முதலில் இரண்டு பைக்குகளை மோதினார். பின்னர் படா கணபதி பகுதியில் … Read more

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவின் சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை! முழு விவரம்…

டெல்லி:  வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மசோதாவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், இன்று இடைக்கால உத்தரவை  உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி சில விதிகளை மட்டும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது. வக்பு சட்டத்திற்கு தடை விதிக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இந்த சட்டத்தின் சில பிரிவுகளுக்கு மட்டும் தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசி ஆகியோர் … Read more

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் – விலைகுறையும் பொருட்கள் எவை! பட்டியலை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: மத்திய நிதியமச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னையில்  நடைபெற்ற  ஜிஎஸ்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது,  ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்   என்றும் கூறியதுடன், ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை?  என்ற பட்டியல் அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார. இந்​தியா முழு​வதும் ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் என்​பது வரும் 22-ம் தேதி அமல்​படுத்​தப்பட உள்​ளது. இதனால் பல்​வேறு பொருட்​களின் விலை குறைய இருக்​கின்​றன. இதையொட்டி தமிழகத்​தின் வளர்ச்​சிக்​கான ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 … Read more

தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா! விஜய்

சென்னை: தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா , அண்ணா பிறந்தநாளையொட்டி, திமுகவை மறைமுகமாக சாடி தவெக தலைவர் விஜய்  குறிப்பிட்டள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா என  குறிப்பிட்டுள்ளார்.  விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர். இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர். தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர். சமூக … Read more

பாமக தலைவர் அன்புமணிதான், அவருக்கே ‘மாம்பழம் ‘! தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக  பாலு விளக்கம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணிதான்,  அன்புமணிக்கே மாம்பழம் சின்னம் என  இந்திய தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக  பாலு விளக்கம் அளித்தார். அதற்கான ஆதாரங்கள் என கடிதங்களையும் செய்தியாளர்களிடம் காட்டினார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே  எழுந்துள்ள மோதல் காரணமாக பாமக இரண்டாக சிதறுண்டு கிடக்கிறது. பாமகவில் இருந்து அன்புமணியை முழுமையாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். மேலும், விரைவில் பாமக பொதுக்குழு கூட்டப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளார். … Read more

விஜய் வருகையால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறும்! கார்த்தி சிதம்பரம் கணிப்பு…

சிவகங்கை:  நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால்,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்  தெரிவித்துள்ளார். சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், இன்று மானாமதுரை அருகே  கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.   ப.சிதம்பரம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.53.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில்,  கார்த்தி சிதம்பரம் எம்.பி. அடிக்கல் நாட்டினார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட … Read more