30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் ஹோர்முஸ் வழியாக 2 டேங்கர்கள் இந்தியாவுக்கு ரகசிய பயணம் ?

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா நோக்கி வந்த இரண்டு எண்ணெய் டேங்கர்கள் தங்களின் டிராக்கிங் கருவிகளை அணைத்தபடி அந்த நீரிணையை கடந்து சென்றதாக Moneycontrol செய்தி வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, மார்ச் 5 முதல் 10 வரை மொத்தம் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு டேங்கர்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி பயணித்துள்ளன. இந்த இரண்டு … Read more

1 லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் மும்பை வந்த கப்பல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து மேற்காசியாவில் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள சூழலில் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து இந்தியாவை அடைவது இதுவே முதல் முறை. எண்ணெய் நிரப்பப்பட்ட கொள்கலன்களை ஏற்றிச் சென்ற லைபீரியாவை தளமாகக் கொண்ட ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ கப்பல் புதன்கிழமை (மார்ச் 11) பிற்பகல் 1 மணிக்கு மும்பை துறைமுகத்தை அடைந்தது. இதில் 1,35,335 டன் கச்சா எண்ணெய் உள்ளது. இது 36 மணி நேரத்திற்குள் மஹுல் … Read more

‘சனாதனி’ என்ற அடையாளம் இருந்தால் மட்டுமே பத்ரிநாத் – கேதார்நாத் கோயிலுக்குள் அனுமதி…

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் “சனாதனத்தை கடைபிடிக்காதவர்களுக்கு” அனுமதி கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது. இந்த முடிவை பத்ரி – கேதார் கோயில் கமிட்டி (Badri-Kedar Temple Committee – BKTC) கூட்டத்தில் கடந்த மார்ச் 10 அன்று நிறைவேற்றியதாக அதன் தலைவர் ஹேமந்த் திவிவேதி தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கோயில்களும் சார் தாம் யாத்திரை எனப்படும் முக்கிய யாத்திரை பாதையின் ஒரு பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து … Read more

“போரை முடிவுக்கு கொண்டுவர எங்கள் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும்” : ஈரான் ஜனாதிபதி

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரை முடிக்க, ஈரானின் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸிஸ்க்கின் கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசியதாக தெரிவித்த அவர், “பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்துள்ளேன். இந்தப் போரை தொடங்கியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தான் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் போரை முடிக்க ஒரே வழி – “ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், ஈரானுக்கு இழப்பீடு … Read more

சிலிண்டர் தட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் முருகானந்தம் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலண்டர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மத்தியஅரசு வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களை கட்டுப்படுத்தி விட்டு,  வீட்டு உபயோக சிலிண்டருக்கு … Read more

அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – கொலைகள்: சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – கொலைகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கும்பலால் மிரட்டி  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்  பெண்களுக்கு எதிரான  பாலியல் வன்கொடுமை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல, அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்தால் தினசரி பல பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் தகவல்களும் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்2 மாணவிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட … Read more

2026 ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட போட்டி அட்டவணை வெளியீடு! பிசிசிஐ

மும்பை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  2026 ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  முதல் போட்டியில் பெங்களூரு – சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இரு கட்டங்களாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலயில். .ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க கால அட்டவணை குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. .உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் … Read more

ஈர சாக்கு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில் கடுமையாக அடித்தனர்! காவல்துறையினர் மீது சிவகங்கை இளைஞர் மரண வாக்குமூலம்…

சிவகங்கை:  விசாரணைக்குஅழைத்து செல்லப்பட்ட இளைஞர், மரணமான வழக்கில்,  அவரது இறுதி வாக்குமூலம் வெளியாகி உள்ளது. அவரது காலில் ஈர சாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில்  கடமையாக தாக்கினர் என தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நடந்த வழக்கில் தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக ரிமாண்ட் அறிக்கையில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், தன்னையும் தனது நண்பர் குணாவையும் சீருடை இல்லாத 10 காவல்துறையினர் … Read more

அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைத்திருங்கள்! அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்..

சென்னை: தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால்,  வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.   மேலும், கச்சா எண்ணை போக்குவரத்துக்கு உதவிகரமாக இருந்து வரும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக,  இந்தியாவிலும் … Read more

தேர்தல் முறைகேடுகள், வன்முறைகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தில்  சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வரும்  தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் , தேர்தல் முறைகேடுகள், வன்முறைகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி , மேற்குவங்கம், அசாம் , கேரளா   ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் இந்த வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.  அதனால், இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தீவிர வாக்காளர் … Read more