கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

கோயமுத்தூர்: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று  மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 முறை இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று 8வது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்! காவல்ஆணையர் அருண் கூறியிருந்தார். இந்த நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று 8வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று  காலை 11 … Read more

பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: என்டிஏ கூட்டணி 192 தொகுதிகளில் முன்னணி… அரசியல் அனாதையானார் பிரசாந்த் கிஷோர்…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி  அமோக முன்னிலையில் உள்ள நிலையில், அரசியல் சாணக்கியன் என்று கூறிக்கொள்ளும்  பிரசாந்த் கிஷோர்-ன் ஜன்சுராஷ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடத்திலும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அரசியல் சாணக்கியன் இன்று அரசியல் அனாதையாகி உள்ளார். பீகார் மக்கள் அவரது கட்சியை அனாதையாக்கி உள்ளனர். நிதிஷ்குமார் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வென்றுவிட்டால், நான் அரசியலை விட்டே செல்கிறேன் என்ற பிரசாந்த் கிஷோரை  … Read more

193 வழக்குகள்: ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணைகைள விரைந்து முடிக்க நீதிபதிகள் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 193 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்படாத வழக்குகள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு … Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: ஆவணங்கள் திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம்!

திருச்சி: தவெக தலைவர் விஜயின் கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆவணங்கள்  வழக்கானது கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதுபோல புதிதாக அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜயும், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளதுடன், தனது கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம், ஆட்சியில் பங்கு என கூறி, மற்ற கட்சிகளுக்கு அழைப்பு … Read more

கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு! நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

டெல்லி: கைது செய்யப்படும்  பிரதமர்,   முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு  செய்ய  நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த கூட்டுக்குழுவில்,  காங்கிரஸ் கட்சி, திமுக, டிஎம்சி கட்சிகளின் உறுப்பினர்கள் சேரவில்லை. ஆனால், அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதா, 2025; ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2025; … Read more

பள்ளிக்கரணை ‘ராம்சார் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்ட தடை நீட்டிப்பு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளிக்கரணை ‘ராம்சார்  சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு கட்ட தனியார்  கட்டுமான நிறுவனத்துக்கு  விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் (Brigade Morgan Heights) என்னும் தனியார் நிறுவனம், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதித்த தடையை டிச.2ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக,  பள்ளிக்கரணை   ராம்சார் நிலத்தில் திமுகஅரசு கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்ததை எதிர்த்து அறப்போர் இயக்கம் … Read more

டெல்லி கார் குண்டுவெடிப்பு: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் முக்கிய பகுதியான  செங்கோட்டை  பகுதியில் உள்ள  மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, கடந்த 10ஆம் தேதி (10.11.2025) மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இந்த … Read more

டெல்லி கார் குண்டு வெடிப்பு குற்றவாளி உமர்நபி! டிஎன்ஏவில் உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி

டெல்லி: தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற  கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர்நபி தான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டடுள்ளது. இது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் 10ந்தேதி அன்று  டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையம் கார் நிறுத்தும் இடத்தில்  மாலை நேரத்தில்  பலத்த சத்ததுடன் கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக் மற்றும் நான்கு … Read more

மகளிர் நலமே சமூக நலம்: ரூ.40 கோடியில் மகளிருக்கான 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

 சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிருக்காக,   ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை  இன்று தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலின்..! புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்கான 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள்  சேவை தொடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் நலமே சமூக நலம் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்த மருத்துவ ஊர்திகள்,  தலா ரூ.1.10 கோடி செலவில்  வடிவமைக்கப்பட்டது. இந்தஅதிநவீன  நடமாடும் மருத்துவ ஊர்தியை முதலமைச்சார் பார்வையிட்டார். புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின்கீழ்,  … Read more

வார விடுமுறை: இந்த வாரம் 920 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் இந்த வாரம்,  வார விடுமுறை நாட்களையொட்டி 920 சிறப்பு பஸ்கள்  இயக்கப்பட உள்ளதாக விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்து சேவைகள் நாளை (வெள்ளி) முதல்  நடைபெறும் என கூறியுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து  நாளை திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 340 பஸ்களும்,  நாளை மறுநாள் … Read more