இரண்டாவது T20 போட்டியில் பங்களாதேஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணியினருக்கு இடையில் நேற்று (06) இடம்பெற்ற இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியினர் 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளனர். அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்ததோடு, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர். … Read more

பொருளாதாரம் வலுவடைந்திருப்பதால் தேவையான அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன 

மிக அவசியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார். இந்தியா, சீனா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்நாட்டில் முதலீட்டுக்காக முன்வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், “பொருளாதார நெருக்கடியால், கடந்த காலத்தில் எவ்விதமான அபிவிருத்தி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், தற்போது பொருளாதாரம் … Read more

பங்களாதேஸுடன் இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஸ் இடையேயான இருபதுக்கு 20 போட்டியில் இரண்டாவது ஆட்டம் இன்று (06) இடம்பெறவுள்ளது. அதற்கிணங்க போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 5.30 மணிக்கு Sylhet மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் 3 ஓட்டங்களால்  இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் அதனால் போட்டியில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஸுடன் இறுதியாக இடம்பெற்ற இருபதுக்கு -20 போட்டிகள் மூன்றிலும் இலங்கை வெற்றிபெற்றமை விசேட அம்சமாகும். 

குற்றங்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் – அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன

நாட்டில் இடம்பெறும் குற்றங்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என அஅமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவைக் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது ஊடகவியளாலர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டின் தேசிய பாதுகாப்பை பாரிய அளவில் புதிதாக உறுதி செய்வதாகவும், கடந்த காலங்களில் இடம்பெற்ற நேமிகளை … Read more

முட்டைகளுக்கான அதிகூடிய சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தில்…

முட்டைகளுக்கான அதிகூடிய சில்லறை விலையை அறிவிக்கும் வரத்தமானியை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட்ட விலை உள்ளடக்கிய யோசனை இந்த வாரத்தினுள் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சமர்ப்பிப்பதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீமானித்துள்ளது. தற்போது சந்தையில் முட்டைகளின் விலை அதிகரிப்புத் தொடர்பாக மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (05) விவசாய அமைச்சில் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. முட்டையொன்றை உற்பத்தி செய்வதற்காக 30 ரூபா மாத்திரமே  செலவு ஏற்படுவதாகவும், தற்போது நாட்டில் முட்டை உற்பத்தி 5.8   மில்லியன் … Read more

அரசாங்கத்தின் பயணப் பாதை வெற்றிகரமானது என்பது உறுதியாகியுள்ளது

• நாட்டில் வலுவடையும் பொருளாதாரத்தின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்போம். • அனைத்து செயற்பாடுகளும் அறிவியல் முறையில் படிப்படியாகவே முன்னெடுக்கப்படுகிறன. • அதிகாரத்திற்காக நான் ஒருபோதும் பொய் சொல்லவில்லை. • இன்றும் நான் அதிகாரத்திற்காக அன்றி, நாட்டை மீளக் கட்டியெழுப்பவே முயற்சிக்கிறேன். • அதிகாரத்திற்கு கனவு காணும் அரசியல்வாதிகள் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. • மரணித்த உடலை மயானத்திற்கு கொண்டுச் செல்ல வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியாமலும், பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டபோது பெரசிட்டமோல் தேடிக்கொள்ள முடியாமலும் இருந்த நாடு, இன்று … Read more

நாளுக்கு நாள் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கு இன்னும் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்றத்தில்  –  ஜனாதிபதி 

நாளுக்கு நாள் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கு இன்னும் இன்னும் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாளுக்கு நாள், மிகவும் பலவீனமாகக் காணப்பட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக மக்களுக்குப் இன்னும் இன்னும் வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவையனைத்தும் திட்டமிடலுக்கு ஏற்ப இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு உரையாற்றினார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நாம் அனைவரும் முறைப்படி மற்றும் … Read more

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம்

• புதிய சட்டத்தின் கீழ் புதிய அதிகாரிகள் மற்றும் நபர்களின் பல பிரிவுகள் உள்ளடக்கம். • திருத்த விபரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுளை, புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பெறலாம். 1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் பிரிவுகளுக்கு மேலதிகமாக, … Read more

இன்றைய வானிலை முன்னறிவிப்பு,

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மார்ச் 06ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 05ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலையில் அல்லது இரவில் சகறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில … Read more

அரசாங்கத்தின் மற்றும் நியதி நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை ஒழுங்குமுறையில் வழங்குவதற்காக புதிய நிறுவனமொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி

நாட்டின் முழு நிலப்பரப்பில் 82% வீதம் வரையான நிலப் பரப்பின் உரிமை அரசிற்குக் காணப்படுவதுடன் அந்த நிலத்தைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் அரசின்  பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள்  ஒன்றிணைந்து பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுவதனால் அரசின் காணிகள் முதலீட்டுச் செயற்பாடுகளுக்காக விடுவிக்கும் போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதனால் புதிய கைத்தொழில் மற்றும்  சேவைகளை உருவாக்குதல் மற்றும் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான,  பொருத்தமான விபரங்களுடன் காணிகளை அடையாளம் காண்பதிலிருந்து, முதலீட்டாளர்கள் வரை தூரநோக்குடனான பொறிமுறையொன்றை பின்பற்றி … Read more