இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024 மார்ச் 06ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2024 மார்ச் 05ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலையில் அல்லது இரவில் சகறிதளவு மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது