அரசாங்கத்தின் மற்றும் நியதி நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை ஒழுங்குமுறையில் வழங்குவதற்காக புதிய நிறுவனமொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி

நாட்டின் முழு நிலப்பரப்பில் 82% வீதம் வரையான நிலப் பரப்பின் உரிமை அரசிற்குக் காணப்படுவதுடன் அந்த நிலத்தைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் அரசின்  பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள்  ஒன்றிணைந்து பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுவதனால் அரசின் காணிகள் முதலீட்டுச் செயற்பாடுகளுக்காக விடுவிக்கும் போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அதனால் புதிய கைத்தொழில் மற்றும்  சேவைகளை உருவாக்குதல் மற்றும் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான,  பொருத்தமான விபரங்களுடன் காணிகளை அடையாளம் காண்பதிலிருந்து, முதலீட்டாளர்கள் வரை தூரநோக்குடனான பொறிமுறையொன்றை பின்பற்றி முறையாக காணிகளை விடுவித்தல் வரை  உத்தியோகபூர்வ அதிகாரத்துடனான பொறிமுறையொன்றை நிறுவுதல் அத்தியவசியமாகும்.

அதற்கிணங்க அரச மற்றும் நியதி நிறுவனங்களின் காணிகளை காணி முதலீட்டாளர்களுக்கு விடுவிப்பதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளரின் பங்குபற்றலின் கீழ் சம்பந்தப்பட்ட சகல அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் காணி முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.