இரண்டாவது T20 போட்டியில் பங்களாதேஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணியினருக்கு இடையில் நேற்று (06) இடம்பெற்ற இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியினர் 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளனர்.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்ததோடு, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக Taskin Ahmed, Mahedi Hasan, Mustafizur Rahman, Soumya Sarkar ஆகியோர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19வது ஓவரிலேயே வெற்றி இலக்கை கடக்க முடிந்தது. பங்களாதேஷ் அணி சார்பா துடுப்பெடுத்தாடிய, அணித் தலைவர் Najmul Hossain Shanto ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மத்திஷ பத்திரன 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இறுதி மற்றும் தீர்க்கமான போட்டி எதிர்வரும் 9ம் திகதி நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.