இராமயண தடங்கள் மீதான கருத்தரங்கம் – Presentation on Ramayana Trails

2022 மார்ச் 10 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இலங்கை-இந்திய சங்கம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் ஆகியவற்றால் நடத்தப்பட்டிருந்த இராமாயண தடங்கள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பிரதி உயர் ஸ்தானிகர் ஸ்ரீ வினோத் கே ஜேக்கப் அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார். 2.         பிரதி உயர் ஸ்தானிகர் அவர்கள் தனது உரையில், இலங்கை இந்தியா இடையிலான கலாசார உறவுகள் மற்றும் வலுவான மக்கள் தொடர்புகள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் இந்த அடிப்படையில் … Read more

சிறப்பாக  செயற்பட்ட 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர்   பெப்ரவரி மாதத்தில்  பாராளுமன்றத்தில் மிகவும்  சுறுசுறுப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA)  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். manthri.lk ஆல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2022 பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் மிகவும்  சிறப்பாக  செயற்பட்ட    ஐந்து எம்.பி.க்களாக பின்வருவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 1. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  2. அலி சப்ரி   3. லக்ஷ்மன் கிரியெல்ல … Read more

தனியார் கொள்கலன் நிறுவனம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு முடிவு

இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் நிறுவனம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று பிற்பகல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதயடுத்து நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை வழமை போன்று இடம்பெறுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எரிபொருளைக் கொண்டு செல்லும் பௌசர்களுக்கு வழங்கப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சர் காமினி லொக்குகே உடன்பாடு தெரிவித்ததை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டதாக இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தேவையானளவு எரிபொருள் தற்போது வழங்கப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவரான சுமித் … Read more

மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதில் தாமதம்

அநேகமான வீடுகள், நிறுவனங்கள் மற்றும் சூரிய களங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவை உபகுழுவின் தலைவருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவற்றை  தேசிய  மின்கட்டமைப்பிற்குள் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.   சூரிய களங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன்  சேர்க்காமை மற்றும் தாமதப்படுத்துவது தொடர்பில் துரிதமாக  அறிக்கை  சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை … Read more

இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் கொவிட் வைரசு தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் குறைவடைந்து வருகிறது .இருப்பினும் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி திங்கள்கிழமை (14) செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிட வசதிகளில் 28 வீதமானோர் மட்டுமே தற்போது தங்குவதாகவும். ஏனையோர் தமது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு … Read more

பலசரக்கு ஏற்றுமதி மூலம் ஆக கூடிய வருமானம்

பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் சமீப காலத்தில் பெறப்பட்ட ஆக கூடிய வருமானத்தை இலங்கை தனதாக்கிக் கொண்டுள்ளது. இதற்கு அமைவாக 2021 ஆம் ஆண்டியில் மாத்திரம் பெறப்பட்ட வருமானம் ஒரு இலட்சத்து மூவாயிரம் மில்லியன் ரூபாய்களாகும். இதனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 41 வீத அதிகரிப்பாகும். இதில் ஆக கூடிய வருமானம் கறுவா மூலம் பெறப்பட்டுள்ளது. 18இ814 மெட்றிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் பெறப்பட்ட வருமானம் 45இ879 மில்லியன் ரூபா ஆகும். கடந்த … Read more

ஜப்பானில் நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு

ஜப்பானின் வடக்கில் புகுஷிமா கடற்பகுதியில்  நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவைக்கொண்டதாக பதிவாகியுள்ளது நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள புல்லட் ரெயில்கள் தடம் புரண்டன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் … Read more

இலங்கைக்காக எப்பொழுதும் முன் நிற்போம் – இந்தியப் பிரதமர் மோடி தெரிவிப்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா பயணமான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். இந்தியப் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (16) மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. அயல் நாடான இலங்கைக்குத் தேவையான சகல விதமான உதவிகளையும் எந்தர்ச் சந்தர்ப்பத்திலும் வழங்குவதற்குத் தயார் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததுடன் இலங்கைக்காக எப்பொழுதும் முன்னிட்போம் என்றும் இதன் … Read more

ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரத்தின் கலசம் திறந்து வைப்பு

ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரத்தின் கலசம் திறந்து வைக்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று (16) கலந்து கொண்டார். வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களினால் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் கலசம் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் புதிய தாதுகோபுரத்திற்கு முதலாவது மலர் பூஜை நடத்தினார். கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ சங்க சபையின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய இத்தேபானே தம்மாலங்கார மஹாநாயக்க தேரர், மல்வத்து விகாரை … Read more

16.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள்

16.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: