எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை உடன் அதிகரிக்குமாறு கோரிக்கை

இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணத்தை உடனடியாக அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கி மீண்டும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்று கூடி, அதன் தீர்மானங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க பல முன்மொழிவுகளை முன்வைத்தது. அதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை உடனடியாக அதிகரிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி … Read more

அமைச்சர் ஒருவரின் செயற்பாடு காரணமாக உச்சகட்ட கடுப்பில் கோட்டாபய

அமைச்சர தினேஷ் குணவர்த்தனவின் செயற்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் கோபத்திற்கு உள்ளானதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்ற வேளையில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் குறித்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காமினி லொக்குகே மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து சென்றுள்ளார். அவசர கூட்டம் ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ள நிலையில் அவர் திரும்பி வரும் … Read more

நாட்டில் இன்று இடம்பெறும் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டில் இன்றையதினமும் சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு நடைமுறையிலிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி நாடுமுழுவதும் ஏற்படும் மின்தடை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்கள் கருத்தறிதல் விசாரணையில் மின்சார சபையின் 15 சாட்சிகள் … Read more

அடகு உட்பட பல வட்டி வீதங்கள் அதிகரிப்பு! இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கியுள்ளது. அந்த வகையில், நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம் 6.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. துணை நில் கடன் வசதி வீதமானது 7.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதமானது 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி! நிதி அமைச்சின் புதிய திட்டம்

அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திர முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரையறைகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்துவதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தின் பிரகாரம் இந்த அனுமதிப்பத்திர முறைமை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்வது வரையறை செய்யப்பட உள்ளது. எனினும், இந்த அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனை தடை செய்யப் போவதில்லை எனவும், இறக்குமதியை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கத் தகவல்கள் … Read more

பதவி விலக ஆயத்தமாகும் மற்றுமொரு அமைச்சர்?

வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க பதவி விலக ஆயத்தமாகி வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பில் சீ.பி. ரட்நாயக்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் சீ.பி. தனது அமைச்சின் பொருட்களைக் கூட எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் தமக்கு வழங்கப்பட்ட அமைச்சின் ஊடாக எதனையும் செய்ய முடியாதிருந்த அமைச்சர், புதிய அமைச்சரவை மாற்றத்தில் வேலை செய்யக்கூடிய அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் என … Read more

வீரவங்ச மற்றும் கம்மன்பிலவின் அமைச்சு பதவிகள் பறிப்பு! அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்த கோட்டாபய

அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாரச்சி மின்சக்தி அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், காமினி லொக்குகே எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேவேளை பவித்ரா வன்னியாராச்சியின்  போக்குவரத்து அமைச்சு பதவி ராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகமவுக்கு வழங்கப்படலாம் என பேசப்படுகிறது. அமைச்சர்கள் பதவியேற்பதற்கான … Read more

வீரவங்ச மற்றும் கம்மன்பிலவின் அமைச்சு பதவிகள் பறிப்பு! அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்த கோட்டாபய

அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாரச்சி மின்சக்தி அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், காமினி லொக்குகே எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேவேளை பவித்ரா வன்னியாராச்சியின்  போக்குவரத்து அமைச்சு பதவி ராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகமவுக்கு வழங்கப்படலாம் என பேசப்படுகிறது. அமைச்சர்கள் பதவியேற்பதற்கான … Read more

உண்மையில் வேதனையாக இருந்தது! – பதவி நீக்கப்பட்ட பின்னர் கம்மன்பில தெரிவிப்பு

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்றிரவு எரிசக்தி அமைச்சுக்கு வருகை தந்து தனக்கு சொந்தமான உடமைகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அந்தந்த அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், இன்று (03) மாலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இருவரையும் அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நீக்கியுள்ளதாக … Read more

தீவிர நிலையை அடையும் யுத்தம்! ரஷ்யாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள செய்தி

உக்ரைனுக்கு எதிரான “ரத்தக்களறியை” உடனே நிறுத்த வேண்டும் எனவும், அங்கிருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்க வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. நேற்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையில், படையெடுப்பு குறித்த தகவல்களை சுயாதீன ஊடகங்கள் ஒளிபரப்பும் திறனை தடுப்பதன் மூலம், “ஊடக சுதந்திரம் மற்றும் உண்மையின் மீது முழு தாக்குதலை” ரஷ்யா தொடங்கியிருப்பதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மில்லியன் கணக்கான ரஷ்யர்கள் சுதந்திரமான … Read more