இலங்கையில் அதிரடியாக குறையப் போகும் வங்கி வட்டி விகிதங்கள்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி எதிர்காலத்தில் இலங்கையில் வட்டி விகிதங்களைக் குறைக்க உதவும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த கடன் வசதி கிடைக்காவிட்டால் அரசாங்கம் அதிக வட்டிக்கு நிதியை வசதிகளை பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்றாவது அல்லது நான்காம் காலாண்டுக்குள் இலங்கையின் பணவீக்கத்தை ஒற்றை பெறுமதிக்கு கொண்டு … Read more

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென்னாபிரிக்கா உதவும்:நலேடி பாண்டோர் உறுதி

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென்னாபிரிக்கா உதவுமென அந்த நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டோர் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில்,இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதிநிதிகள் குழுவிடமே அமைச்சர் நலேடி பாண்டோர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இலங்கையின் அமைச்சர் குழு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர்களை சந்திக்கும் நோக்கில் இலங்கையின் அமைச்சர் குழுவினர் அங்கு … Read more

ஜனாதிபதியானதும் கோட்டாபய எடுத்த நடவடிக்கை! பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் தொடர்பான தகவல் (Video)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்து அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.  அந்த நடவடிக்கைகளுக்கு அமைய 34 ஆயிரம் சிற்றூழியர்களாக உள்வாங்கப்பட்டார்கள்.  அதன் பின்னர் நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த செயற்பாடு நிறுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.  அந்த 34 ஆயிரம் பேரில்  வடக்கு மாகாணத்தில் … Read more

நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக தடைப்படும்! எரிசக்தி அமைச்சருக்கு சென்ற எச்சரிக்கை கடிதம்

நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக தடைப்படும் அளவிற்கு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன பணியாளர்களின் தொழிற்சங்கங்கள், அமைச்சர் கஞ்சன விஜயசேகரவை எச்சரித்துள்ளன. இந்த விடயத்தை நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கத்தின் கடிதம் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் விநியோகம் தடைப்படும் அளவுக்கு பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என எச்சரித்து, பெட்ரோலிய … Read more

பிரித்தானியாவில் ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களின் விபரீத முடிவு! வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டதாக சர்வதேச  ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட 5 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள், ருவாண்டா தலைநகர் கிகாலியில் உள்ள ருவாண்டா இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் அவர்கள் டியாகோ கார்சியாவில் 18 மாத சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிற நோய்களுக்காக உளவியல் … Read more

அடுத்தக் கட்டம் சிரமமானதாகவே அமையும்! நிதி கிடைக்காமல் போகலாம் என எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்து விட்டதாக தெரிவித்து மகிழ்ச்சியை சிலர் வெளிப்படுத்தினாலும் அடுத்த கட்டம் கடினமானதாகவே இருக்கும்  என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.  நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  நிதி கிடைக்காமல் போகலாம் இலங்கை இணங்கியுள்ளதற்கு அமையவே சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கியுள்ளது.  அந்த நிபந்தனைகளை நிறைவு செய்யாமல் விடும் பட்சத்தில் அடுத்த கட்டம் சிரமமமானதாகவே அமையும். அடுத்தக் கட்டத்தில் நிதி … Read more

மற்றுமொரு விலை குறைப்பு

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் யூரியா உர மூட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளது.  உர மூட்டையின் விலையை குறைக்க தனியார் துறை உர இறக்குமதி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. குறைக்கப்படும் தொகை இதன்படி, 50 கிலோகிராம் யூரியா உர மூடை ஒன்றின் விலை 18,500 ரூபாவில் இருந்து 11,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த  அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link

மக்களுக்கான நிவாரணம் குறித்து வெளியான தகவல்! நாடாளுமன்றில் அமைச்சர் அறிவிப்பு

பேயிடமிருந்தேனும் வேலையை வாங்கி இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.  நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  எதிர்க்கட்சித் தலைவர் காணும் கனவு எதிர்க்கட்சித் தலைவர் தினமும் கனவு காண்கின்றார்.  எங்கே சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதன் இணக்கப்பாடு என தொடர்ச்சியாக கூச்சலிடுகின்றார். சபையில் சமர்ப்பிக்குமாறு கூறுகின்றார். எதிர்க்கட்சித் தலைவரே சற்றுப் பொறுமையாக … Read more

தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதியில் நடத்தப்படாது! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்தாதிருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.   உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள்  இம்மாதம் 28 மற்றும் 31ஆம் திகதிகளிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதியும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.   எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் இந்த நிலையில்,  இந்த வாக்கெடுப்புக்களை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.   மேலும், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு  நடவடிக்கைகளில் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தேர்தல்கள் … Read more

குறைந்த வருமானம் பெறும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவல்! அரசாங்கத்தின் தீர்மானம் வெளியானது

குறைந்த வருமானம் பெறும் இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.  இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இது குறித்து பிரதமர் அறிவித்துள்ளார்.  இதன்படி, குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.  நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழி  சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளும் அதற்கான வழியை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.  நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளது என்றும், … Read more