தாய்லாந்து சுற்றுலா செல்ல திட்டமா; இந்த செய்தி உங்களுக்குத் தான்

தாய்லாந்தில் விடுமுறையை கழிக்க அல்லது வணிகப் பயணத்தைத் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளவர்கள் என்றால் , இதோ உங்களுக்கான நல்ல செய்தி! தாய்லாந்து அரசாங்கம் தாய்லாந்து பாஸ் மற்றும் கட்டாய மருத்துவக் காப்பீட்டின் நிபந்தனையை நீக்கி, நாட்டிற்குள் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இந்த தடை தாய்லாந்து குடிமக்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி நீக்கப்பட்டது, இப்போது அது வெளிநாட்டினருக்கும் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார காப்பீடு கட்டாயமில்லை தாய்லாந்தின் கோவிட்-19 சூழ்நிலை நிர்வாகத்திற்கான மையம் (CCSA) இப்போது … Read more

இஸ்ரேலில் மீண்டும் அரசியல் நெருக்கடி; கூட்டணி அரசு கலைந்தது

மத்திய கிழக்கில் குடியேறிய உலகின் ஒரே யூத நாடான இஸ்ரேல் மீண்டும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு திங்கள்கிழமை நஃப்தலி பென்னட் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திடீரென காட்சிகள் மாறின. கூட்டணி அரசில் இருந்த இரு கட்சிகளும் பரஸ்பரம் பிரிந்து செல்வதாக அறிவித்தன. எவ்வாறாயினும், தற்போதைக்கு தற்காலிக அரசாங்கம் ஆட்சியில் இருக்கும். அக்டோபரில் புதிய தேர்தல்கள் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நஃப்தாலி மற்றும் யாயிர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் கடந்த தேர்தலுக்குப் பிறகு நஃப்தாலி பெனட் … Read more

உக்ரைன் போருக்கு மத்தியில், சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா

உக்ரைனை ஆக்கிரமித்ததற்காக மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவில் இருந்து சீனாவின் எண்ணெய் இறக்குமதிகள் மே மாதத்தில் 55 சதவீதம் உயர்ந்து, சீனாவின் மிகப்பெரிய  எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா, சவுதி அரேபியாவை விட அதிக அளவில் எண்ணெய் சப்ளை செய்கிறது. மே மாதத்தில், சீனா ரஷ்யாவிலிருந்து சுமார் 8.42 மில்லியன் டன் எண்ணெயை இறக்குமதி செய்தது. மேற்கு நாடுகளைப் போலல்லாமல், பெய்ஜிங் மாஸ்கோ தொடுத்துள்ள போரைக் கண்டிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிப்ரவரியில், … Read more

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியினால் பின்னடைவை எதிர்நோக்கும் அதிபர் மேக்ரோன்

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் பதவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் இமானவேல் மேக்ரோன் வென்ற நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது. அதிபர் மேக்ரோனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறுதிப் பெரும்பான்மையை இழந்தார்.  மேக்ரோன் நாடாளுமன்ற கட்டுப்பாட்டை இழந்தது அவருக்கு ஒரு பெரிய பின்னடைவாகும். ஏனெனில் அது தேசத்தை அரசியல் முடக்கத்தில் தள்ளும் … Read more

ரஷ்ய போர் விமானத்தை தயாரித்த சீனா… ஆனால் இது வேற மாதிரி

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் மிக் ரக போர் விமானங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திய விமானப்படையிலும் அந்த ரக போர் விமானங்கள் அதிகம் இருக்கின்றன.  இந்தச் சூழலில், சீனாவின் செங்டு ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் (சிஏசி) மிக்-21 விமானத்துடைய வடிவமைப்பின் அடிப்படையில் ஜே-7 ஒற்றை எஞ்சின் கொண்ட இலகுரக போர் விமானத்தை வடிவமைத்து தயாரித்துள்ளது. ஆனால் இது உண்மையான விமானம் இல்லை. ரிமோட் கண்ட்ரோல் பொம்மை போர் விமானம் ஆகும் இந்த விமானங்களானது சீனாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக … Read more

Netflix The Chosen One: மெக்சிகோ வேன் விபத்தில் பிரபல நடிகர்கள் இருவர் பலி

நெட்ஃபிக்ஸ் வெப்சீரிஸ் தொடரில் நடித்த இரண்டு நடிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். நெட்ஃபிக்ஸ் தொடரான ​​`The Chosen One` வலைதளத் தொடரில் பணியாற்றி வந்த இருவர் இந்த விபத்தில் உயிரிழந்தனர், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.  படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் விபத்து நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. விபத்திற்கு உள்ளான வேன் சாண்டா ரோசாலியாவிலிருந்து உள்ளூர் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்தது. பாஜா கலிபோர்னியா சுர் தீபகற்பத்தில் முலேஜ் அருகே அவர்களது வேன் விபத்துக்குள்ளானது. விபத்து ஜூன் 16 அன்று … Read more

Sri Lankan Crisis: அரசு அலுவலங்களும் பள்ளிக்கூடங்களும் மூடப்படுகிறது: இலங்கை அரசு

கொழும்பு: எரிபொருள் இருப்புக்கள் விரைவாக குறைந்து வரும் நிலையில் இலங்கையில் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி இல்லாமல் திண்டாடுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தின் பல துறைகளை முடக்கியிருக்கிறது.  பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறும் இலங்கையில் நிலைமைகள் தொடர்ந்து மிகவும் மோசமாகிக் கொண்டு இருக்கும் நிலையில், நாளை (2022, ஜூன் 20 திங்கட்கிழமை) முதல் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்படும்.  கடந்த சில மாதங்களாக மோசமான பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்ட சிக்கல்களால் தொடர்ந்து தத்தளித்து வரும் இலங்கையில் கடுமையான … Read more

இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்

சீனாவின் கடன் வலைக்குள் சிக்கி சின்னா பின்னமாகியுள்ள இலங்கையின் பாதையில் பாகிஸ்தானும் செல்கிறது. லாகூர் ஆரஞ்ச் லைன் திட்டத்திற்கு வழங்கியுள்ள 55.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை, 2023  நவம்பர் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்துமாறு சீனா சமீபத்தில் கோரியது பாகிஸ்தானிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பொருளாதார நிலை ஏற்கனவே மிக மோசமாக உள்ளபாகிஸ்தான் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. இதற்கிடையில், மார்ச் மாத இறுதியில், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் வைத்திருக்கும் அந்நியச் … Read more

Abortion Rights: குழந்தை பிறப்பை முடிவு செய்வது அடிப்படை உரிமை: பெண்களின் உரிமை

அமெரிக்காவின் அயோவா உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு பாதுகாப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதாக போராட்டங்கள் வெடித்துள்ளன. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினார்கள். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு அதன் 2018 தீர்ப்பை மாற்றியமைக்கிறது. 2018ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு, அயோவா மாகணத்தில் கருக்கலைப்பு செய்யும் உரிமை ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது. மேலும் படிக்க | கருவை கலைத்த பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைதண்டனை தற்போதைய … Read more

வாரத்திற்கு 50 லட்சம் கொசுக்களை உற்பத்தி செய்யும் சிங்கப்பூர் அரசு!

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு டெங்கு, மலேரியா போன்ற நோய்  பெருமளவில் பரவி லட்சக்கணக்கான மக்களை பாதித்தது. அந்த நோய்களின் தாக்கம் மக்களிடையே கதவுகளையும், ஜென்னல்களையும் எப்போதும் மூடிவைக்கும் ஒரு பழக்க வழக்கத்திற்கு தள்ளியது.  இருப்பினும் இப்போதும் ஒரு சில இடங்களில் மலேரியா, டெங்கு காய்ச்சல்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த இரண்டு நோய்களையும் பரப்பும் முக்கிய நோய் கடத்தியாக கொசு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு சந்தையில் இறக்கப்பட்ட கொசு வத்தி, எலக்ரிக் கொசு மருந்து … Read more